பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15 வேண்டிய வேண்டியாங் கெய்துவிப்பான் அடிவெல்க !
    யாண்டு மிடும்பை அகற்றுவான் அடிவெல்க !
    பேராண்மை பெற்றான்தன் பெய்கழல்கள் வெல்க!
    ஊராண்மை யுள்ளான் உயர்கழல்கள் வெல்க !
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொற்கழல்கள் வெல்க!

20 நெறிநின்ற வித்தகன்தன் நீள்கழல்கள் வெல்க !
    அருவுருவாய் அமைந்தான் அருங்கழல்கள் வெல்க!
    குருவுமெனப் பொலிந்தான் குரைகழல்கள் வெல்க !
    அறத்தாற்றில் நின்றான் அருங்கழல்கள் வெல்க!
    புறத்தாற்றில் போகாதான் பூங்கழல்கள் வெல்க !

25 கரம்குவிவார் உள்ளக் கருத்தன் கழல்வெல்க !
    சிரம்குவிவார் சிந்தையிலுறைவான் கழல்வெல்க !
    அருந்தவ முடித்தான் அவனடி போற்றி!
    இராமனை இதயத்தில் வைத்தா னடிபோற்றி!
    ஆடல் மாக்களிறு அனையான் அடிபோற்றி!

30 பாடல் இசையொடு பயின்றான் அடிபோற்றி!
    சீரார் சொல்லின் செல்வன் அடிபோற்றி !
    பேரார் நரசிம்மப் பெருந்தொண்டன் அடிபோற்றி!
    அறத்தார்க்கு அருள்செய் அமலன் அடிபோற்றி!
    புறத்தாரைப் புறங்காணும் பொலனார் அடிபோற்றி!

35 கடலெனப் பரந்த கலைஞன் அடிபோற்றி!
    அடலே றனையவெம் அத்தன் அடிபோற்றி!
    அருமருந் தாதிவங் தாண்டான் அடிபோற்றி!
    கருணையின் கடலே யனையான் அடிபோற்றி!
    நன்றருளித் தீதகற்றும் நம்பி அடிபோற்றி!