பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

65 பார்புகழ் பண்டித னாக விளங்கி
    அரும்பிய துளவப் பைந்தா ரணிந்து
    அரியின் அடியவ னாயினன் , அவன்தான்
    மாட்சியில் மாபெரும் மலை யாவான்
    காட்சியில் கயிலையங் கிரி யாவான்

70 பூத்த மரம்போல் பொன்பொலி மேனியன்
    பொன்னெடுங் கிரிகள் போற் பொலிந்ததிண் தோளான்
    அருந்தவ முடித்தங் காற்றல் மிகப்பெற்று
    அரிக்குலத் தர்சன் அமைச்சனா யமர்ந்து
    அரும்பணி யாற்றி நின்றா னவன்தன்

75 அருந்துயர் களைந்தான் , ஆரணிய மடைந்து
    அன்பு மனைவியை இழந்தல் லலுற்று
    என்பு மிளைத்திளை யோனுடன் திரிந்த
    அன்பனை யடியாரிடர் நீக்கியைக் கண்டு
    அன்பு கொண்டே யகனமர் காதலில்

80 அற்புத ரறியும் அற்புத னவனென
    அறிந்தங் கவன்தன் அருந்துய ரகற்ற
    ஓதநீர் கடந்து உறுபகை தடிந்து
    வேதநா யகன்வெற்றிக் கடிகோ லினனால்
    அன்னற் பூமகள் அடியவ னாகி

85 கள்ள வரக்கரைக் கருவறுத் திடுவான்
    மன்னன் நடத்திய மாபெரும் போரில்
    தன்பே ராற்றலால் தரணியள வுயர்ந்து
    மருத்துமலை கொணர்ந்து மயங்கிய வீரரை
    தருக்குட னெழச்செய்தே யுலகளித்தாய்