110
ஆடும்
அல்லிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“போங்க ஆச்சி”!
கையைக் கழுவி விட்டு, மானைப் போலத் துள்ளி அறைக்கு ஓடினாள் அல்லி.
படுக்கையில் புரண்ட அல்லி, மீண்டும் கனவில்ஆழ்ந்தாள். கனவுகளைப் போல, உயிருக்குப் பலம் தரக் கூடியது உலகத்தில் வேறு என்ன இருக்கிறது? எதுவுமில்லை. ஆகையினால், வாழ்க கனவுகள்!
“உனக்கு ஒரு தபால் வந்திருக்கும்மா!”
“அவுங்க லெட்டராத்தான் இருக்கும். இப்ப வேறு யாரு நமக்குக் கடுதாசு எழுதப் போறாங்க?”
கடிதத்தை எடுத்தாள்.
‘அவுங்கள்து இல்லியே? யாரு, சுகுணாவா…? …பேரே புதுசா இருக்கே. …’
கடிதத்தைப் பரபரப்புடன் படிக்கத் துவங்கினாள். அவளது உதடுகள் நடுங்கின… …!
“அன்புள்ள அல்லி,
முன்னே பின்னே தெரியாம லெட்டர் எழுதறேன்னு தப்பா நினைச்சுக்காதே; சந்தர்ப்பம் இப்படி ஆயிடுச்சு.
என்னோட அத்தான் அருணாசலத்தை, நீ கட்டிக்கப் போறியாமே? இது உனக்கே நல்லா இருக்கா?
அவுங்க அப்பா—என்னோட அம்மாவோட அண்ணன், எங்க அம்மா சாகிற போது, அவுங்க கையாலேதான் என்னைப் பிடிச்சுக் கொடுத்திட்டுச் செத்தாங்க. அதிலேருந்து ‘அதுக்கு நான்தான்; எனக்கு அதுதான்’னு பெரியவங்களே தீர்மானிச்சு வச்சுட்டாங்க.