பக்கம்:ஆடும் தீபம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



118

ஆடும்


முகத்தை மூடிக்கொண்டுவிம்மி விசித்து அழத் தொடங்கினாள்

“பார்த்தியா'நான் நினைச்சது சரியாய்ப்போச்சு, ‘என்று கூறிப் பெருமூச்செறிந்தார் ராஜநாயகம், பிறகு இதமான மொழிகளால் அவளுக்குத் தேறுதல் சொல்ல முற்பட்டார். இப்போது அவர் உடம்பில் படபடப்பு இல்லை; குரலில் பதற்றமும் இல்லை.

ஒருவேளை உனக்கு இந்தக் கல்யாண விஷயத்திலே ஏதாச்சும்மனக்குறை இருக்குமோண்னு முதல்லேநினைச்சேன். அந்த நினைப்பு என்னையே ஒருஆட்டம் ஆட்டி        வச்சிட்டுது. இப்போ அது இல்லேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி ஏற்படுது. இந்த மாதிரி சமயத்திலே, ஒரு பொண்ணு பெத்தவங்களை நினைக்கப்படாதின்னு எந்தப் பாவியும் சொல்லமாட்டாங்க. ஆனா நான் என்ன சொல் றேன்னா, புத்திசாலியான நீ...                                                           
 பு...த்...தி... சாலி அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்
 அம்மா? ஏன் அலுத்துக்கிறே? உன் புத்திசாலித்தனத்துக்கு என்ன? உன் சம்பந்தமா என்மனசிலே உண்டான தகாத நினைப்பை ஒரு பார்வையாலே, ஒரு சொல்லாலே முளையிலே கிள்ளி எறிஞ்ச காரியத்தைவிட வேற          என்னம்மாவேணும் உன்னோட புத்திசாலித்தனத்தை நான் கொண்டாட? இது மாத்திரம் இல்லேஅல்லி,உன்கிட்டே சொல்லிக்கிறதிலே என்ன?உன்னாலே கண் திறந்துவிடப்பட்ட நான் உன் சம்பந்தமா மாத்திரம் திருந்தல்லே; பொதுவாகவே ஒரு நல்ல திருத்தத்தை அடைஞ்சிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா. நீ இங்கே வந்து சேர்ந்தப்புறத் தான்-உன்னலேதான்-நான் நல்லவன் ஆனேன். அல்லி."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/119&oldid=1318930" இலிருந்து மீள்விக்கப்பட்டது