இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
ஆடும்
ராஜநாயகம் திகைத்தார். ‘அருணாசலத்தைக் கேக்கவேணாமா?’’ கல்யாணம் ஆன அப்புறமில்லே அதெல்லாம்?’’ ‘அதான் நிச்சயமாயிட்டுதேம்மா?” அதை ஒத்திப் போட்டுக்கலாம்.’’
எதை?’’
‘கல்யாணத்தை...!”
நீ தான் பேசிறீயா?. திடீர்னு எம்மா இந்தத் தடுமாற்றம்?’’
என்னவோ, மனசிலே அப்படித் தோணுது. அதை யெல்லாம் பற்றி அப்புறம் பேசிக்கலாம், சரி சொல்லி அவரை அனுப்பிடுங்க.”
“தீர்மானமாகச் சொல்றியா அம்மா?’’
“ஆமாம் அப்பா.’ ராஜநாயகம் தலை குனிந்தவாறு சற்று நேரம் நின்றிருந்தார். பிறகு மெளனமாக, மெதுவாக, தயங்கியபடி முன்புறம் சென்றார்,
“இரண்டு நாளிலே சொல்றேங்க, என்றார் அவர். “நல்லது. உங்க பதில் நல்ல பதிலாகவே இருக்கட்டும்.”
சிரித்தமுகத்துடன் பலராமையா சென்றார்.
ராஜநாயகம் வீட்டின் உள்ளே வந்தார்.
- அல்லி...!"