142
ஆடும்
கம்பி ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது. ‘அம்மா’ என்று அலறிக் கொண்டு, கீழே சாய்ந்தான்.
‘வீல்’ என்று கதறியபடி, எழுந்து நின்றாள் அல்லி. அவளுடைய உடல் நடுங்கியது. எல்லாம் இமைக்கும், நேரம்தான். அடுத்து அங்கே தோன்றிய இளைஞனைக் கண்டதும், இன்னும் மிரண்டு விட்டாள் அல்லி. இற்றுப் போன மரத்தைப் போல, கால்கள் நிலையில்லாமல் ஆடின. இதயம். உருகிக் கரைந்து விட்டது போல ஓர் உணர்வு; தலை சுழன்றது. கண்களிரண்டும் பட படவென்று துடித்து, மேலே மேலே செருகிக் கொண்டு சென்றன. மயங்கிய நிலையில் கீழே இறங்கிப் போன அல்லியின் கண்கள், கீழே விழுந்து கிடந்த சாத்தையனை நோக்கின. அவனது தலையிலிருந்து, ரத்தம் குபுகுபுவென்று கொட்டிக் கொண்டிருந்தது. சாத்தையன் மயங்கிக் கிடந்தான். அல்லியையும், அவனையும் மாறி, மாறிப் பார்த்தபடி, செய்வதறியாது திகைத்தபடி நின்று கொண்டிருந்தான் இன்னாசி.