உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



156

ஆடும்


அல்லி. ‘சாத்தையன் நமக்கு முந்திக் கொண்டு விட்டான் என்று ஓடி வந்தாய்!’

“அல்லி, நான் இப்போது கொலை பாதகன்தான். சாத்தையன் பொறி தட்டி விழச் செய்யும் அளவுக்குத்தான் பலத்தை உபயோகிக்க விரும்பினேன். வயிற்றில் முன்பு பாய்ந்த வேல் கம்புக் குத்து, ஞாபகத்துக்கு வந்தது. என் நிதானத்தை இழந்து விட்ட நிலையில், பலத்து விழுந்திருக்கிறது. சாத்தையன் முந்திக் கொண்டான் என்ற ஆத்திரத்தில் அல்ல—நீ நினைப்பது போல அல்லி!—அருணாசலம் கொஞ்சம் முன்னாடி, உன்னால் திருந்தி விட்டான். இப்போதுதான் நான் தெளிந்தேன்!…”

அல்லிக்கு பளிச்சென்று ராஜநாயகம் வார்த்தைகள் ஞாபகம் வந்தன. ‘நீ சாமான்யப் பெண் இல்லை.என்னைத் திருத்தினே. அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே. இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டி வச்சு, மதியாலே திருத்த, நீ பிறந்திருக்கியோ?’ இதென்ன, தனக்கு அத்தகைய சக்தியா இருக்கிறது?—முதலில் ஆட்டி வைக்கவும், பிறகு திருத்தவும். கீழே கிடந்த சாத்தையனின் பிணத்தைப் பார்த்த பின், இன்னாசியைப் பார்த்தாள். இன்னாசியின் முகத்தில் கண்ட அமைதி, அந்த பிணத்தின் அமைதியின் பிரதிபலிப்பா? இல்லை. இது வரையுள்ள நாட்களின் நினைவே மாறி, மீண்டும் ஒரு பிள்ளையார் சுழி போட்டுத் தான் ஆரம்பிப்பதற்காக ஒரு புனர் வாழ்வின் ஆரம்பத்திற்கான அறிகுறியா? அவளால் நிதானிக்க முடியவில்லை. இன்னாசி ஒரு மிருகமாக இப்போது இல்லை என்பதை மட்டும் அவள் கண்டறிந்தாள் .

‘அல்லி’ என்று உறுதியான குரலில் கூப்பிட்டான் இன்னாசி. “நீ புறப்பட்டுப் போய், அதோ, நேரே படி இறங்கி, இடது பக்கம் திரும்பிப் போனாயானால், வாசலுக்கு நேரான வழி தெரியும், போய் விடு,. போய் விடு!” அவன் குரல் விரட்டலாக வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/157&oldid=1688745" இலிருந்து மீள்விக்கப்பட்டது