இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166
ஆடும்
இனிமேல்தான் இது நிதானமாகச் செல்லும். பிரளயத்திற்குப் பின் உண்டாகும் அமைதி...!’
அவள் மனத்தை மாற்ற முடியாது என்று ராஜநாயகம் உணர்ந்துவிட்டார். மனத்தில் பிடிவாதம் வஜ்ரமாக ஏறி விட்டால் என்ன செய்வது?
வரும்போது எப்படி ஒரு பையுடன் வந்தாளோ, அப்படித்தான் அவள் அன்று ரெயிலடிக்கு வந்தாள். ரெயிலடியில்
அல்லி!’ என்றகுரல். அடிநாளிலிருந்து பழக்கப்பட்ட சிநேகிதி செந்தாமரையின் குரல்-கேட்டது.
அவள் திடுக்கிட்டு நின்றாள்,