இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178
ஆடும்
உன்னிடம் ஒரு வரம் பெற்றுப் போகத்தான் நான் வந்தேன். அல்லி...’
ஆடும் தீபத்தின் ஒளி அருணாசலத்தின் கூப்பிய கைகளிலும், இதழ் மூடிய கண்களிலும், வழிந்தோடிய நீரிலும் நிழலாடியது. அவன் நயனங்களைத் திறந்தான்.
அல்லியின் கையிலிருந்த அம்பிகையின் பூமாலை அருணாசலத்திடம் ஏகியது.
அத்தான், நான் இனிமேல் உங்கள் சொத்து
அருணாசலம் மணமாலையை அல்லிக்குச் சூட்டினான். வெறுமை சிரித்தது...!
தெறித்து ஓடியிருந்த கண்ணீரில் பாதம் பதித்தது சட்டம் தானா?
“ தாயே, நான் இனி ஆடும் தீபம் அல்ல என் முதற்கனவை வாழவைத்த உன் கருணைக்கு ஈடேது அம்மா...?’
சுபம்