உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஆடும்




ரசனைக்கு
விருந்து
ஒரே ரகப் பொருள்களைத் தொகுத்து மகிழும் ரசிக உள்ளம், பல ரகங்களையும் ஒன்று கூட்டி, ஆனந்தம் அடையவும் அவாவுகிறது. அதன் தூண்டுதலால் கிடைக்கும் விளைவுகளில் விசேஷக் கவர்ச்சியும், தனிச் சுவையும், அலாதி மணமும் அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

பல ரக மலர்களைக் கொண்ட கதம்பம் தனிச் சிறப்பு உடையதுதானே? கலவைச் சந்தனத்தில் விசேஷ மணம் இல்லை என்று சொல்ல முடியுமா? அவியலிலும், கூட்டாஞ் சோற்றிலும். ‘மிக்ஸ்ச’ரிலும் தனிச்சுவை இருப்பதனால்தானே நாவும், மனமும் அவற்றை மீண்டும் மீண்டும் நாடுகின்றன?

ரசிக உள்ளத்தின் இத்தகைய தூண்டுதல்தான், தொடர்கதையிலும் கதம்ப உத்தியைக் கையாளும் ஆசையை வளர்த்திருக்க வேண்டும். ஒரு சில முறைகள் வெற்றி கண்ட பிறகு, அதுவே விசேஷ மரபு ஆக வந்தாலும் வந்து விடலாம்!

நண்பர் பூவை அவர்களின் முயற்சியால் உருவாகும் ‘ஆடும் தீப’த்தில், முதல் சுடர் ஏற்றும் பொறுப்பை அன்பர் வாசவன் அவர்கள் சிறப்பாகச் செய்து விட்டார். சுடர், சுடரைக் கொளுத்துகிறது. தீபம் தீப வரிசைக்கு ஒளி தருகிறது. தீப வரிசையில், ஒரே ரக விளக்குகள் இருப்பதை விட
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/31&oldid=1682521" இலிருந்து மீள்விக்கப்பட்டது