பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

117

அந்த மேடைமீது ஒரு புளிய மரம் பெரிதாக வளர்ந்திருந்தது. பழமையான மரந்தான் என்றும் தெரிந்தது. ஸார் உங்களுக்குத் தெரியுமா இந்த புளியைப் பற்றி! இதுதான் சார் பிறவாப்புளி என்றார் நண்பர்! அதென்ன பிறவாப்புளி'. அது தான் பிறந்து, வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கொண்டு நிற்கிறதே! இதை ஏன் பிறவாப்புளி என்கிறீர்கள்? என்றேன். நண்பரோ உண்மைதான் சார். இந்த மரம் பூக்கும், காய்க்கும், பழுக்கவும் செய்யும், ஆனால் இந்த மரத்தின் பழத்தினின்றும் எடுத்த விதைகளை முளைக்கப் போட்டால் மூளைப்பதே இல்லை. இந்த மரத்துக்குப் பிறவி, இப்பிறவியோடு சரி, இனிப் பிறவியே கிடையாது’ என்று விளக்க ஆரம்பித்தார்.

'பிறவாப்புளி இங்கிருக்கிறதே! இறவாப் பொருள் ஏதேனும் உண்டோ? என்று கேள்வியைப் போட்டேன் நான். 'உண்டு சார், உண்டு, அதுவும் இந்த தலத்திலேயே இருக்கிறது! வாருங்கள் என்றார் நண்பர். அந்தப் பெரிய கோயிலுக்கு வடக்கே காஞ்சிமா நதியின் தென்கரையிலுள்ள வடகயிலாயம் என்னும் சிறிய கோயிலின் வெளிமுகப்பில் ஒரு பனை நீண்டு வளர்ந்து நின்று கொண்டிருந்தது. எத்தனை வருவடிகாலமாக அது அங்கே இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் இந்தத் தலைமுறையில் அங்கே இல்லையாம். இதற்கு அழிவே கிடையாதாம்.