பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அவளாக இருக்குமா என்று இவளுக்கு சந்தேகம், இவளாக இருக்குமா என்று அவளுக்குச் சந்தேகம்.

இதற்குள் ரயிலும் டன்னலைக் கடந்து வெளிப் பிரதேசத்திற்கு வந்து விட்டது. சீமாட்டிகள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள்.

ஹலிபாக்ஸோ இருவரையும் அப்படியும் இப்படியும் கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்திருந்து தொப்பியைக் கழற்றி தலையைத் தாழ்த்தி, இரண்டு சீமாட்டிகளையும் பார்த்து, 'உங்களில் என் வந்தனம் யாருக்கு உரியதோ' என்று குறும்பாக வேறே கேட்டுவிட்டு வண்டியிலிருந்து இறங்கிப் போய்விட்டார்.

ஹலிபாக்ஸ்-க்கு இது ஒரு வாலிப விளையாட்டு. நமக்கோ, ஆங்கில நாகரீக வாழக்கையின் ஒரு சிறு அம்சத்தை அறிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்தச் சம்பவம். எவ்வளவு தூரம் உண்மையோ அறியோம். இது கொஞ்ச காலத்திற்கு முன் பத்திரிகையில் வந்த செய்தி, சிறந்த ராஜ தந்திரியான ஹலிபாக்ஸ் பிரபு, நல்ல நகைச்சுவையுடை யவராயும் இருந்திருக்கிறார்.

அவர் சிரிக்கத் தெரிந்தவர் தான். ஆமாம், இந்தக் கிண்டல் வேலையை எல்லாம் செய்ய இவர் யாரிடம் கற்றுக் கொண்டார்? என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைசொல்கிறது ஒரு தமிழ்ப் பாட்டு. நல்ல அந்திமாலை நேரம் கயிலாயத்திலே பரமசிவனும் பார்வதிதேவியும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் சீமந்த புத்திரனான பிள்ளையார் இருவருக்கும் இடையே வீற்றிருக்கிறார். தாய்க்கும் தந்தைக்குமே தங்கள் மூத்த