பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



154

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

நாடார் சமூகத்தினர். அதுவரை யாதொரு தடையும் காணோமே என்றவுடன் நாடார்களுக்குத் தெம்பு பிறந்தது. -

தங்கள் பல்லக்கு செல்ல இடையூறாக இருக்கிறது என்று சொல்லி அத்தெருவின் நடுவில் போட்டிருந்த பந்தலைப் பிரிக்கின்றனர். உடனே கல்லெறி விழுகிறது. சிலர் வெளியே வந்து பந்தலைப் பிரித்தவர்களை மடக்குகின்றனர். நாடார் சமூகத்தினர் கலகத்துக்கு என்று தயார் செய்துகொண்டு வந்தவர்களாயிற்றே! ஆதலால் கலகம் மும்முரமாக நடக்கிறது. உடன் வந்த ஏட்டு செய்வது என்ன என்று அறியாமல் துப்பாக்கிப் பிரயோகம் வேறே செய்து விடுகிறார்.

அதனால் ஒருவரும் காயம் அடையவில்லை என்றாலும் கலகம் நின்று விடுகிறது. பல்லக்கு திரும்பி விடுகிறது. விசாரணைக்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து விடுகின்றனர்.

போலீஸ் விசாரணையின் பலனாக, நாடார் சமூகத்தில் இருபதுபேர் பேரில் அவர்கள் கலகம் செய்ய முனைந்ததாக ஒரு வழக்கும், அதைப் போலவே வேளாளர் இருபது பேர் பேரில் கலகம் செய்ததாக ஒரு வழக்கும் போடப் படுகிறது.

'கேஸ்' என் கோர்ட்டில் விசாரணைக்கும் வந்து விடுகிறது. ஒவ்வொரு தரப்பிலும் இருபது முப்பது சாட்சிகள். போலீஸ் தரப்பு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, எதிர்தரப்பு சாட்சிகள் விசாரணை என்று கிட்டத்தட்ட ஒரு வருஷகாலம் நடக்கிறது. வக்கீல்களுக்கு நல்ல வரும்படி. கேஸ் முடிகிற தருணத்தில் இருக்கிறது. அந்த நிலையில் என்னைத் தலைச்சேரிக்கு டிப்டி-