பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



158

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


நாம் பிழை செய்யாமல் நம்மைத் தவிர்க்க வேண்டியல்லவா இத்தனைக் கூத்தை நடத்தியிருக்கிறான் என்று எண்ணினேன். அந்த இறைவனின் அருளை வியந்து கொண்டே, திருத்திய தீர்ப்பையே படித்து முடித்தேன்.

ஆம். எனது வாழ்விலே மறக்க முடியாதது இது. இறைவன் நியதியிலும், திருமுறைகளிலும் அழுத்தமான நம்பிக்கை ஏற்பட நல்லதொரு வழி வகுத்துக் கொடுத்ததும் இச் சந்தர்ப்பம் தானே!