பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

163

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூ மாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி
தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி
சங்கரா சய போற்றி போற்றி என்றும்
அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலற நில்லே

என்று அவர் மனம் கசிந்து பாடியபோது, நானும் அவருடன் சேர்ந்து, ஆரூரா ஆரூரா! என்றே அலற ஆரம்பித்து விட்டேன். கோயில் புகுவது, அங்கு அலகிடுவது, மெழுகுவது, பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடுவது, கும்பிட்டுக் கூத்தாடுவது எல்லாம், மனதை எப்படிப் பக்குவப்படுத்தும், எப்படி ஒரிடத்தில் நிலை நிறுத்தும் என்று கண்டேன்.

கோயிலை வலம் வந்தோம் இருவரும். மேலப் பிராகாரத்தில் ஒரு மாடக் குழியில் ஒரு சிலையைக் கண்டேன். பெரியவர் அதைக் கையெடுத்துக் கும்பிட்டார். நான் அதைக் கண்டு சிரித்தேன். "என்ன தம்பீ!' என்றார். 'என்ன தாத்தா இறைவனைக் காண அவன் அருளே கண்ணாகக் காண வேண்டும் . என்றீர்கள். ஏதோ இயற்கையோடு ஒட்டியிருந்தால், அவன் அருளைக் கண்ணாகக் கொண்டு காணா விட்டாலும், கலையென்றாவது கண்டு களிக்கலாம். இப்படி இயற்கைக்கே விரோதமாக ஆணும் பெண்ணும் ஓர் உருவில் காட்சி கொடுக்கிறார்களே - கொஞ்சமும் இயற்கைக்குப் பொருத்தமாக இல்லையே. இது இறையுமில்லை, கலையுமில்லையே" என்றேன். அர்த்த நாரியின் சிலா விக்கிரகத்தின் முன்பு நின்று கொண்டு தான் இப்படிக்