பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

31

சைனாவில், நேபாளத்தில் எல்லாம் இந்த விநாயக வணக்கம் பரவியிருக்கிறது.

இப்படியெல்லாம் கலைஞனது சிந்தனையில் உருப் பெற்று மக்களால் எல்லாம் வணங்கப் பெறும் இக் கடவுளின் திருவுருவத்தைச் சித்திரத்திலே எழுதினார்கள்; கல்லிலே செதுக்கினார்கள், செம்பிலே வடித்தார்கள் தமிழர்கள். பால கணபதி, மகா கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, வாதாபி கணபதி, ஹேரம்ப கணபதி, பிரசன்ன கணபதி, உச்சிஷ்ட கணபதி என்றெல்லாம் எண்ணற்ற பெயர்களால் அழைத்தார்கள். இம்மட்டோ, ஆதி விநாயகர், சோம விநாயகர், மாணிக்க விநாயகர், வரசித்தி விநாயகர் என்றும் பெயரிட்டு, இதை விட இன்னும் அருமையாக ஆண்ட பிள்ளையார், வேதப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார், கள்ள வாரணப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார் என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பாராட்டப் பெற்ற விநாயகரை கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் மட்டும் பூட்டி வைத்துவிட வில்லை தமிழர்கள். ஊர் ஊராக, தெருத் தெருவாக, சந்தி சந்தியாக, பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள். பெரியவர்கள் மாத்திரம் அல்ல, பாமரர்கள், ஜாதியால் உயர்ந்த வர்கள் மாத்திரம் அல்ல. தாழ்ந்த இனத்தவர்கள் எல்லோரும் கண்டு தொழ, நெருங்கிப் பழகத் தகுந்த முறையில் எல்லாம் அமைத்திருக்கிறார்கள்.

தமிழ்க் கலைஞனது ஆசை இத்துடன் நின்றுவிட வில்லை. பிள்ளையாரை உட்கார வைத்துப் பார்த்திருக்கிறான். நிற்க வைத்தும் நோக்கியிருக்கிறான்; நடம் ஆட வைத்துக் களித்திருக்கிறான்; நடனம் ஆடும் விநாயகரை நர்த்தன விநாயகர் என்று நாம கரணமும் செய்திருக்கிறான்.