பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இன்னுமொரு கதை. சிதம்பரத்தை அடுத்த திருநாரை யூரிலே உள்ள பிள்ளையார் பொல்லாப் பிள்ளையார். பொல்லா என்பதனால் அவர் ஒரு பொல்லாத பிள்ளை அல்ல. சிற்றுளியால் பொள்ளப்படாத சுயம்பு மூர்த்தி என்பதனால் தான். அவரைப் பொள்ளாப் பிள்ளையார் என்று மக்கள் அழைத்தனர். நாளாவட்டத்தில் பொள்ளாப் பிள்ளை, பொல்லாப் பிள்ளையாகவே மாறிவிட்டார். உலக வழக்கில். ஆனால் இந்தப் பொல்லாப் பிள்ளை செய்த பொல்லாத வேலை காரணமாகவே, நமக்கு தெய்வம் மணக்கும் தேவாரப் பாக்கள் எல்லாம் கிடைத் திருக்கின்றன. திருநாரையூரிலே பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்தவர் ஒரு அந்தனர். ஒரு நாள் வெளியூர் செல்ல விரும்பியபோது தன் மகனைப் பூசை செய்யும் படி பணித்துவிட்டுச் சென்றிருந்தார். பிள்ளை என்னத் தைக் கண்டான்? பூசையை முடித்து, நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து அவர் அதை உண்ண வேண்டி னான். அசையாது கல்லுப் பிள்ளையாராக இருந்தார் பொல்லாப் பிள்ளையார். பார்த்தான் அந்தணச் சிறுவன். 'உண்ணுகின்றீரா, இல்லாவிட்டால் உமது திருவடியிலே என் தலையை மோதி உடைத்துக் கொள்ளவா? என்றான். இப்படிச் சும்மா பயங்காட்டவில்லை. உண்மையாகவே தன் தலையை மோத முனைந்து விட்டான்.

பார்த்தார் பிள்ளையார். தும்பிக்கையை நீட்டி, வாயைத் திறந்து அவன் தந்த நைவேத்தியத்தை எல்லாம் வாங்கி வாங்கி உண்டார். இதை, ஊர் திரும்பிய தந்தை நம்பவில்லை முதலில். மறுநாள், நிகழும் அற்புதத்தைக் கண்டார். அவ்வளவு தான். பொல்லாப் பிள்ளையாருக்கு அமுதுரட்டிய அந்தணச் சிறுவன் நம்பியாண்டார் நம்பியாகி விடுகிறான். சோழ மன்னர் ராஜராஜன் இந்த நம்பியை வந்து கண்டு வணங்குகிறான். அவன் ஆர்வம் தீர, அந்தப் பிள்ளையாரே நம்பியிடம் திருமுறைகள்