பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கஜமகாசுரன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்ட பொழுது, அவன்றன் கொலுவில், அவன் தேவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்தி, தங்கள் தங்கள் தலையில் மும்முறை குட்டி, இரண்டு கைகளாலும் எதிராக காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்து வந்தான். இப்படி கஜாமகாசுரன் முன்பு செய்து கொண்டதைத்தான், கணபதி கஜமுகாசுரனை வென்று அடக்கிய பின்பும் அவர் முன் செய்யத் தலைப்பட்டனர். இப்படித் தேவர் செய்யும் திருத்தொண்டு கணபதிக்கு உகந்ததாயிருந்தது.

அதனால் தான், இன்றும் கணபதியை வணங்குவோர் தலைகளில் குட்டிக் கொண்டு, காதைப் பிடித்துத் தோப் புக் கரணம் போட்டு வணங்குகின்றனர். ஆணவம் மிகுந் துள்ள ஆடவர் எல்லாம் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதாலேயே, தன் முனைப்பு நீங்கினவர்களாய், என்றும் இறைவனுக்கே ஆட்படும் பேறு பெறுகிறார்கள் அல்லவா? ஆண்டவன் சந்நிதி யிலே தன்முனைப்பு நீங்கத்தானே தரையில் விழுந்து வணங்குகிறோம்; தோப்புக்கரணம் போடு கிறோம்.

இன்னும் எத்தனையோ கதைகள் விநாயகரைப் பற்றி. கதைகளைக் கதைகள் என்ற அளவில் மட்டும் படிக் காமல், கதை எந்த அடிப்படையில், எந்த தத்துவத்தை விளக்க எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்வோ மானால் - தெரிந்து கொள்ள முயல்வோமானால் - சமய உலகில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து விடும். தமிழன் கண்ட கடவுள், ஏதோ ஒரு நாளில், ஒரு வருவடித்தில் உருவானவர் அல்ல.

நீண்ட காலமாக கலைஞர்கள் சிந்தித்துச் சிந்தித்து 'உள்ளக் கிழியில் உரு எழுதி' அதன் பின் தான்