பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அனுமனது விசுப ரூபம்

பிறப்பு நிலை கேடு
இவையாவான்; பாவம்
அறத்தினொடு ஐம்பூதம்
ஆவான் - உறற்கரிய
வானாவான் மண்ணாவான்
மன்னுயிர்கள் அத்தனையும்
தானாதல் காட்டினான் தான்

என்று கீதா ரகஸ்யத்தையே உரைக்கின்றார், பெருந் தேவனார், தான் இயற்றிய பாரதத்தில், தேர்தட்டின் மீது திகைத்து வாள்த்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்ட அர்ச்சுனனுக்கு 'எல்லாம் நானே ஆதலால் பலன் கருதாது உன் கருமத்தைச் செய்’ என்று உபதேசிக்கிறார் பகவான். இந்த கீதோபதேசத்தை, அருச்சுனனைத் தவிர வேறு ஒரு நபரும் அதே சமயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தான், பார்த்தனுடைய ரதத்தின் கொடியில் அமர்ந் திருந்த அனுமார். அவரோ கீதோபதேசம் கேட்கு முன்பே எல்லாவற்றையும் 'பாராயணம்' செய்யும் மனப் பக்குவம் பெற்றிருந்தவர்.

ஆதலால், கீதாவிற்கு விளக்கம் சொல்லுவதில் கீதாச் சிரியனையும் மிஞ்சி விடுகிறார். கீதார்த்தமு என்று தொடங்கும் கீர்த்தனத்தில் பக்த தியாகராஜர். அனுமன், அர்ச்சுனனுடைய தேர்க் கொடியில் வீர புருஷனாக இருந்து கீதோபதேசத்தைக் கேட்டதே ஒரு அழகான கதை. கதை இதுதான்.