பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவன் அனுமன், ஆதலால் ராம்னை விட்டுக் கடைசியாகப் பிரிகிற போது எல்லாக் காலத்திலும் தான் வாழ்ந்தாலும், ராமனுக்கு அத்தகைய நிலைத்த வாழ்வு இல்லையே. ஆதலால் அவனை எப் பொழுதுமே காணும் வாய்ப்புப் பெறுவது எங்ங்னம் என்று ஏங்கியிருக்கிறான்.

அப்போது ராமன், அவனுக்கு அடுத்த யுகத்திலும் ராமனாகவே காட்சி கொடுப்பதாக ஒத்துக் கொண்டு விடுகிறான். அனுமனும் அதே விருப்பத்தோடு அடுத்த யுகத்தில் சேதுக்கரைக்கு வந்து தவம் செய்கிறான். தீர்த்த யாத்திரை புறப்பட்ட அருச்சுனன் அதே சேதுக்கரைக்கு வருகிறான். ராம நாம பஜனம் செய்யும் அனுமனைப் பார்த்து என்ன உங்கள் ராமன் இந்தச் சொத்தைக் கடலை கடப்பதற்கு கல்லாலேயே ஒர் அணைகட்டியிருக்கிறான். நானாகயிருந்தால் என்னுடைய அம்புகளைக் கொண்டே ஒர் அஸ்திரபாலம் அமைத்து அதன் பேரிலே சேனையை நடத்தி கடல் கடந்திருப்பேனே! என்று எகத்தாளமாகப் பேசுகிறான். அனுமனுக்கோ அசாத்திய கோபம். அவனும், "உன் அஸ்திரபாலம் என்னைப் போன்ற ஒருவனைக் கூடத் தாங்க வலியற்றதாக இருக்கும்” என்று மடக்குகிறான். -

அதைத் தான் பார்த்து விடுவோமே என்று அர்ச்சுனன் தன் அம்புகளைக் கொண்டே அரைக்கணத்தில் ஒர் அஸ்திர பாலத்தை அமைத்து விடுகிறான். அனுமனும் உடனே விசுவரூபம் எடுத்து, அந்தப் பாலத்தின் மேல் நடக்க ஆரம்பிக்கிறான். பாலமோ நொறுங்கித் துகள் துகள்ாகி விடுகிறது. அருச்சுனனுக்கோ அவமானம் தாங்க முடியவில்லை. தன் உயிர் துணைவனான கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே தீப்புகுந்து உயிரை விட்டுவிட விரைகிறான்.