பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

97

மாக அன்னையையும் அத்தனையும் சேர்ந்தே ஒரு சுற்றுச் சுற்றுகிறார். 'உலகம் உங்களிடம் தோன்றி, உங்களிடம் நிலைத்து, உங்களிடம் தானே ஒடுங்குகிறது. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதாகத் தானே அர்த்தம். கொடுங்கள் கனியை என்கிறார்.

மறுக்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார்கள் அம்மையும் அப்பனும் விநாயகரிடம். உலகத்தை எல்லாம் சுற்றி, அலுத்து வந்த பிள்ளை விஷயம் அறிந்து தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கோவணாண்டியாக வெளியேறி விடுகிறான் கயிலையை விட்டு. தாயாகிய பார்வதி, அப்பா! நீயே ஞானப்பழமாக இருக்கும்போது உனக்கு வேறு பழம் நாங்கள் தர வேண்டுமா?’ என்று கூறி சமாதானப் படுத்துகிறாள். இப்படித் ஞானப் பழமாகவே இருக்கும் பழனியாண்டவன் - பழனி மலை மீது ஏறி நின்று கொண்டிருக்கிறான் என்பர் புராணிகர்கள்.

இத்துடன் இன்னொரு கதை. மூவர்க்கும் முதல்வனான முருகனை, ஏனோ ஒரு நாள் பிரமன் மதியாது நடந்திருக்கிறான். அவ்வளவுதான், அவனை அழைத்து அவன் செய்யும் சிருஷ்டிக்கே அடிப்படையான பிரணவத்தின் பொருள் சொல்லச் சொல்லியிருக்கிறான் முருகன். பிரமன் சொல்லமுடியாமல் விழித்திருக்கிறான். உடனே அவனைக் காதைப் பிடித்து இழுத்து தலையிலே குட்டி, 'பிரணவத்தின் பொருளை அறியாத நீ, சிருஷ்டி செய்ய அருகதை உடையனில்லை’ என்று கூறிச் சிறையிலேயே அடைத்து விடுகிறான் முருகன். விஷயம் அறிகிறார் சிவபெருமான்; மகனிடத்து வருகிறார். 'உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள்?’ என்று கேட்கிறார். 'ஓ! தெரியுமே, ' என்று எகத்தாளமாகச் சொல்கிறான். 'இப்போது சொல் பார்ப்போம் என்கிறார். சளைக்க

ஆ.பெ.அ.நெ-7