டாக்டர். சி. பா.
105
போல நின்று எக்காலத்தும் அவனை அச்சுறுத்திய பெருமான் கண்ணன் ஆவான்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே
-திருப்பாவை : 25
8. எதிரிகளை வென்றே நிற்கும் வழக்கம் உடைய கோவிந்தன்.
கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா
-திருப்பாவை : 27
9. மாடுமேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டுள்ள சாதியிற் பிறந்துள்ளவன் கண்ணன்.
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்துநீ
-திருப்பாவை : 29
(ஆ) இராமாவதாரம்
1. இராமபிரானால் இறந்துபட்டவன் கும்பகருணன் உன் உறக்கத்திற்குத் தோற்று அவன் உறக்கத்தையும் உனக்குத் தந்துவிட்டானோ?
...............புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
-திருப்பாவை : 10
ஆ·一7