150 ஆணடாள
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஒங்குயர் மலயத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேக கின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்4ே
இடைக்காலத்தில் திருப்பதி மேலும் புகழ் பெற்றது.
திருப்பதி மிதியாப் பாதம்
சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க் கீயாக் கைகள்
இனியசொற் கேளாக் காது புரப்பவர் தங்கள் கண்ணிர்
பொழிதரச் சாகாத் தேகம் இருப்பினும் படுபனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே.கே
மலைகளில் வேங்கடமலையே தாம் விரும்புவது என்கின்றார் முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என் (று) எண்ணி - பிரியாது பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்றும் வேங்கடமேயாம் விரும்பும் வெற்புே
பலருக்கும் தெரிந்த அர அரி வடிவத்தை இயைத்துப் பேயாழ்வார் பாடிய பாடல் வேங்கடம் பற்றியதாகும்.