பக்கம்:ஆண் சிங்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


வனாக வளர்ந்தவன் தானே? என்று சிங்காரம் பிள்ளை பேசுவார்.

‘என்னையும் அந்தக் காலத்திலே பெரியவங்க பாடாய்ப் படுத்தினாங்க. ஏய் சிங்காரம், முக்கால் துட்டுக்கு அது வாங்கிக்கிட்டு வா ஏ, சிங்காரம் ஒரணாவுக்கு இது வாங்கி வா’... இப்படி ஆற்பத்துக்கெல்லாம் இந்தச் சிங்காரம் தான் ஓடனும். நானும் கொஞ்ச நாள் உதவி செஞ்சு பார்த்தேன். அப்புறம் பெரியவங்க – பெரியவங்க என்று எல்லோரும் என் தலையிலே மிளகா அரைக்கப் பாக்கிறாங்கடான்னு நானாகவே உணர்ந்துட்டேன். உடனே என்ன செஞ்சேன்? முடியாது மாட்டேன்னு முரண்டு பிடிச்சேனா? கிடையாது. சாமான்கள் வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்தால் மிச்சக் காசைத் திரும்பிக் கொடுக்கிறது கிடையாது; சிலசமயம் சாமான் எதுவும் வாங்கிக் கொடுக்காமலே, காசு எங்கோ விழுந்து தொலைந்து போச்சு என்று சாதிப்பது. இப்படி சண்டித்தனங்கள் செய்தேன்...

‘கணபதியா பிள்ளை, கணபதியா பிள்ளைன்னு ஒருத்தர், சுத்த சைவம். அவருக்கு அடிக்கடி மூக்குப் பொடி வாங்கிக் கொடுக்க வேண்டிய வேலை – இனாம் சர்வீஸ்தான்...என் தலையிலே விழுந்தது. கொஞ்ச நாள் ஒழுங்காக வாங்கிக் கொடுத்து வந்தேன். எனக்கே அலுத்துப் போச்சு. ஒருநாள் ஒரு வேலை செய்தேன்...பொடி மட்டையை கணபதியா பிள்ளை ஆசையோடு வாங்கினார். தம்பி சிங்காரம் கெட்டிக்காரன்; நிறையப் பொடி வாங்கி வந்திருக் கான். மட்டை பருமனாக இருப்பதைப் பார்த்தாலே தெரியுதே என்று பாராட்டினார். உற்சாகமாக மட் டைக்குள் விரல்களைத் திணித்தவர் திடுக்கிட்ட மாதிரித் தோணிச்சு. வேகமாக விரல்களை வெளியே இழுத்தார். சதசதன்னு ரத்தமும் சதையுமாக... அதை அப்படியே உதறி எறிந்தார்...அட படுபாவிப் பயலே, குருவிக் குஞ்சையா கொன்னு போட்டே? அதையா பொடியோடு சேர்த்து வச்சுக் கொண்டு வந்தேன்னு அலறினார். அப்போ அவர் மூஞ்சி போன போக்கு வேடிக்கையான காட்சியாக இருந்தது.

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/110&oldid=1072868" இலிருந்து மீள்விக்கப்பட்டது