பக்கம்:ஆண் சிங்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

'கதை எப்டி?’

‘ரொம்ப அபாரம், ஸார்!’

‘நானே எழுதினேன்’ என்று கனைத்தார் முதலாளி டைரக்டர்.

‘அதனாலே தான் அபாரமா அமைஞ்சிருக்கு என்று கூடச் சேர்ந்து கனைத்தார் வசன கர்த்தா ‘கோவலன்’.

கதையின் பெயர்தான் ‘சாகாத காத'லே தவிர, கதையில் ஒரு டஜன் சாவுகள் வருகின்றன. எல்லா சினிமாக் கதைகளையும் போலவே, இதுவும் கதாநாய கனும் நாயகியும் கோவணமும் அரைமுடியும் கட்டித் தவழ்ந்து விளையாடுகிற பிராயத்திலேயே ஆரம்பமாகி விடுகிறது. இருவரது பெற்றோர்களும் ‘இது தான் மாப்பிள்ளை. இது தான் பொண்ணு’ என்று பேசுகிருர்கள். பிறகு வேட்டி கட்டிய பயலும், பாவாடை கட்டிய ‘புள்ளெ'யும் ஒன்றாகச் சேர்ந்து, புருஷன் பெண்டாட்டி விளையாட்டு விளையாடுகிறார்கள். இப்படி வளர்கிறது கதை.

இருவரும் பெரியவர்களாகி விடுகிறார்கள். காதல் கருங்கல் பாறைமாதிரி வளர்ந்துவிட்டது. வழக்கம் போல், பெண்ணின் பெற்றோர்கள் வேறிடத்தில் மாப் பிள்ளை தேடுகிறார்கள். பையன் அவளை எப்படியும் திருமணம் செய்தே தீருவேன். எங்கள் காதல் சாகாது என்று சொல்கிறான்.

ஆனால் கல்யாணம் நடந்து விடுகிறது. மணமகன் பிணமகனாகிறான். திருடர் கூட்டம் வந்து மாப்பிள்ளை யைக் கொன்றுவிட்டது. திருடர் தலைவன் பெண்ணை அபேஸ் செய்துகொண்டு ஓடிவிடுகிறான். கதாநாயகன் என்ன இதுவரை துங்கிக்கொண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? மாப்பிள்ளையை திறமையாக ஒழித் துக்கட்ட வழி என்ன என்று கேட்டு காளி தேவியை நினைத்து பூஜை செய்தான். காளி வந்தாள். ‘துார தொலைவிலே உள்ள விஷப் பூ ஒன்றை எடுத்து வந்து கல்யாணப் பரிசாக மணமகனுக்குக் கொடு. அதை மோந்து பார்த்ததுமே ஆள் “அவுட்டாயிடுவான்’ பிறகு சுபம், மங்களம்தான்’ என அருள் புரிந்தாள்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/25&oldid=1071131" இலிருந்து மீள்விக்கப்பட்டது