பக்கம்:ஆண் சிங்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

விஷப் பூ தேடிப் போன காதலனுக்கு எவ்வளவோ விபத்துகளெல்லாம் வருகின்றன. கத்திச் சண்டை, சிலம்படி, துள்ளல், தாவல், கொல்லுதல்களுக்கெல்லாம் தாராளமாக இடம் வேண்டாமா? ஒருமட்டும், விஷப் பூ கொய்து எடுத்து வரும்போது தான் காதலிக்குக் கல்யாணம் நடக்கிறது என அறிந்தான் அவன். வேகமாக ஓடிவந்தான். அதற்குள் மணமகன் காவி! காதலி அபேஸ்!

அவ்வளவுதான். மாயமாகக் கிடைத்த குதிரை மீது ஏறி, திருடனைப் பிடிக்க ஒடுகிருன், காதலன். தனியாகத்தான். இரவு எல்லோரும் தூங்கும்போது ஒவ்வொருவர் மூக்கிலும் விஷமலரைக் காட்டிவிடவே, அத்தனைபேரும் குளோஸ்!’

‘நாதா. நீங்களா?’ என்று துள்ளித் தாவுகிறாள் புள்ளி மயில். எதிர்பார்த்த முத்தம்!

‘ஆ, இதென்ன அழகான புஷ்பம்! என்று பிடுங்க முயல்கிறாள் காதலி. அவன் கொடுக்க மறுக்கவே இவள் கோபம் கொள்கிறாள். எங்கிருந்கோ வந்த அம்பு அவளை ‘சட்னி’ யாக்கி விடுகிறது; அவன் ஒப்பாரி கீதம் பாடுகிருன்.

‘அழாதீர் அன்பரே! அவள் செத்தாள். நான் இருக்கிறேன்’ என்று முன்னே வந்து நின்றாள் பச்சை மயில் வடிவத்தாள் – பதுமை போன்றாள்!

அவன் விஷப் பூ தேடப் போனபோது வழியில் அகப்பட்ட சரக்கு இது கிடைத்தவரை லாபம் என்று காதல் பண்ணி மகிழ்ந்த கதாநாயகன், காதலியைக் கைவிடப் பார்த்தான். அவள் விடுவாளா? தேடிவந்து ஜோடிப் புறாவைக் கொன்று போட்டுக் கூடிவிடத் துடித்தாள்.

“இந்த அழகான மலரை அவளுக்கா கொடுக்க நினைத்தீர்கள்? என்று ஆசையோடு எடுத்து மோந்தாள். அந்தோ, அவளும் சிவலோக பிராப்தி அடைந்தாள்.

கதாநாயகன் எங்கள் காதல் சாகாது. இது சாகாத காதல், என்று ஒரு மைல் நீள லெக்சரடித்து

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/26&oldid=1071132" இலிருந்து மீள்விக்கப்பட்டது