பக்கம்:ஆண் சிங்கம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


அவர் அவனைச் சாட்டையால் அடித்ததும்,இன்னொரு தடவை அவனைப் பட்டினி போட்டதும் அவர் நினைவுக்கு வந்தது.

‘அதுக்கெல்லாம் சேர்த்து, பயல் நமக்குப் பாடம் கற்பிக்க ஆசைப்பட்டான் போலிருக்கு! அவனே சரியானபடி பாடம் படித்துவிட்டான்!’ என்று எண்ணினார் பிள்ளை. வாய்விட்டுச் சிரித்தார். ‘அடேய் பண்ன்னிப் பயலே! உனக்கு ஏன்லேய் இந்தப் புத்தி வந்தது?’ என்று கேட்டுவிட்டு, மேலும் சிரித்தார் பண்ணையார்.

*

73