பக்கம்:ஆண் சிங்கம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிலந்தி

சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது, உள்ளத்தின் பதை பதைப்பும் ஒடுங்கி விடவில்லை.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பரபரவென்று போர்வையை உதறினான். அவனே அப்படி எழுந்திருக்கும்படி தூண்டியது...

அதுதான் அவனுக்குப் புரியவில்லை. அது வெறும் கனவா? நனவு தூண்டிய உணர்வா? அல்லது, உள் ளுணர்வு தந்த அபாய அறிவிப்பா?

கனவு என்றால் -

நிஜமாக முன் நின்றது அதை மறைக்கும்படி தூண்டியது.

நிஜம் - நனவின் விளைவு - என்றால், தூங்கிக் கொண்டிருந்தவன், கன்னக் கனிந்த இருட்டிலே அதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது எவ்வாறு?

உள்ளுணர்வின் உந்துதல் என்றாலோ -

உள்ளுணர்வு உணர்வைத் தூண்டலாம். மூளையை விழிப்புறச் செய்யலாம். தூங்கும் போதுகூட, கண் னினால் காண்பது போல் பளிச்செனப் புலப்படுத்து வதற்கு அதற்கு ஏது சக்தி? உள்ளுணர்வு அதீதமான கண்களும் பெற்றிருக்குமோ?

சிதம்பரத்துக்கு எதுவுமே புரியவில்லை. அறிவைக் குழப்பும் விஷயமாகத்தான் அமைந்தது அது.

- இரண்டு கண்கள். அவனையே வெறித்து நோக்கும் ஒளிப்பொறிகள். சூரியனின் கதிர்களை

74