348 ஆத்மஜோதி
பித்துக்குளி முருகதாஸ், சுவாமிகளுடன் இருபது நாட்கள்
(57 அருமைநாயகம்) - - - சென்ற இதழ்த் தொடர்ச்சி —
- பித்துக்குளி பூரீ முருகதாஸ் சுவாமிகள் நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களால் மேலும் சிறப்புற்று விளங் கும் திருத்தலங்களான திருக்கோணேஸ்வரத்திற்கும் திருக் கேதீஸ்வரத்திற்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். திருக்கேதீஸ்வரத்தில் நடந்து வருகின்ற கட்டட சிற்பத் திறன்கள் அவர் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அத்தகு வேலைப்பாடுகள் அதி சிறப்பாக இடம்பெறுவதற்குத் தாம் மறுதடவை இலங்கை வரும்போது நிதி வசூலுக்கான இன் னிசை நிகழ்த்த இறையருள் பாலிக்க வேண்டுமென விண் ணப்பித்துக் கொண்டார். திருக்கோணேஸ்வரத்திலே எம் பெருமான வீதி வலம் வந்து வணங்குகையில் ஆங்கு திருக் கோணேசர் பாடல்கள் சுற்றவர மையினால் எழுதப்பட்டி ருப்பதைக் கண்ணுற்றார். அவை எல்லாம் கருங்கற்களில் பொறிக்கப்படவேண்டும்; அப்போதுதான் அது வெகு நன் ருக இருக்கும் என்ருர், இலங்கையில் யாராவது அப்பணியைத் தொடங்கிச் செய்யும் பட்சத்தில் இந்தியாவிலேயுள்ள ஆதீனமொன்றிலிருந்து கணிசமான அளவு பண உதவி கிடைக்கச் செய்யத் தாம் ஆவன செய்வாரென்று கோவில் அர்ச்சகரிடம் பித்துக்குளி பூரீ முருகதாஸ் சுவாமிகள் வாக்களித்தார். ஈழத்திலேயுள்ள சைவ அன்பர்கள் சுவாமிகளின் மேற்கூறிய யோசனைகளைச் செவிமடுத்து அவரைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு செயல்படுவார்களாயின் தமக்கு அது இக பாசுகங்களைத் தருமென்பதில் சந்தேகமில்லை.
சுவாமிகளோடு கூடவே வந்து அவருக்குப் பக்கவாத் தியகாரர்களாக ஒத்துழைத்தவர்களைப் பற்றி இங்கு குறிப் பிடுதல் பொருத்தமானதாகும். ரீ. எஸ். முத்துநடேசை யர், சிக்கல் ஆர். வடிவேல், திரு. எஸ். வாசுதேவராவ் மூவருமே அவர்கள். பூரீ. எஸ். முத்துநடேசையர் ஒர் அற் புதமான ஆர்மோனிய வித்துவான். அவர் அமைதியாக உட்கார்ந்து தமது கை விரல்களின் அசைவுகளினால் ஆர்