பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் போர் என்ற பவித்திரமான நோன்பினாலும், முழுமையடைந்த ஒருவரின் இந்தக் கதையில் நீங்கள் இதுவரை கேட்டிராத ஆத்மாவின் இனிய பண்புகள் ஒலிக்கின்றன.

இந்நாவலின் இரண்டாவது பதிப்பைத் தமிழ்ப் புத்தகாலயத்தார் வெளியிடுகிறார்கள். தமிழ்ப் புத்தகாலய உரிமையாளர் திரு. கண. முத்தையா அவர்களும், கோவை புக் சென்டர் டி.வி.எஸ்.மணி அவர்களும், எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பா அவர்களும் இந்நாவலை எழுதும் போது சில அரிய குறிப்புகளை அளித்து உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கும், வாசகர் வட்டத் தாருக்கும், இதை எழுதும் போது உடனிருந்து படித்து ரசித்து உதவிய சகோதரர் ஆர். பாலசுப்ரமணியத்துக்கும், இதை வெளியிடும் போது நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். நாட்டின் இன்றைய சுபீட்சத்துக்கு உரமாகி நிற்கும் நேற்றைய தியாகிகள் அனைவரின் திருவடிகளுக்கும், தேசபக்தர்களின் நினைவுகளுக்கும் அஞ்சலியாக இந் நாவலைச் சமர்ப்பிக்கிறேன்.

'தீபம்', சென்னை - 2 - நா.பார்த்தசாரதி 27.7. 70