பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஆனந்த முதல் ஆனந்த வரை பின்னுவார்களல்லவா! அதையே நானும் செய்கிறேன். அம்மா இல்லையே என்ற குறை வேண்டாம் என்று கூறி அருகே அழைத்து அழகாகப் பின்னுவார்கள். அத்தலைமை யாசிரியரும் என்னிடம் அன்பாகவே இருப்பார். அவர் நாள்தோறும் நான் படிப்பதில் அக்கறை காட்டுவார். அவருக்கு இடையில் தேர்தல் சம்பந்தமான ஒரு பெருவேலை வந்தது. அவரோடு இராப்பகலாக இருந்து அவற்றை யெல்லாம் கவனித்த எனக்குத் தேர்தல் வேடிக்கையாகவே இருந்தது. இந்துமத பாடசாலையை நடத்தும் வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள் பொதுப் பணியில் ஈடுபட்டவர்கள். இதுபோன்ற தேர்தல்களிலெல்லாம் தலையிட வேண்டாம் என்று அனைவரையும் வற்புறுத்துபவர்கள். (பின்னும்கூடத் தேர்தலில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நல்ல வழியில் திருப்ப முயல்பவர்கள்.) ஆயினும் அன்று எப்படியோ அவர்கள் தேர்தல் சுழியில் சிக்கிவிட்டார்கள். செங்கற்பட்டு மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தல் என்று நினைக்கிறேன். அவரை எதிர்த்து நின்றவர் யார் எனத் தற்போது திட்டமாக நினைவில்லை. சிலகாலம் அக்கழகத்தில் உறுப்பினராக இருந்த கோபால் நாயுடுவாக இருக்கலாமோ என எண்ணு கின்றேன். எப்படியாயினும் தேர்தலில் இவர் நின்றது முதலில் எனக்கு விந்தையாகவே இருந்தது. காலை வேளை களில் மூழ்கி எழுந்து நான்கு மணிக்கு இறைவன்ன வழிபட்டு, பிறகு பள்ளித் தொண்டில் கருத்திருந்தும் இவருக்கு எப்படி இத்தேர்தல் நினைவு வந்தது என்பதை அன்று என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் பின்பு அவர் பலருக்கு உபதேசம் செய்யும்போது, இப்படிப்பட்ட நல்லவர் அன்று ஏன் அப்படி நின்று அத்தனை அரும்பாடுபட்டார் என்று நினைப்பது வழக்கம். அவர் தேர்தலில் நின்ற வேடிக்கையைக் காட்டிலும் அவர் அச்சிட்ட துண்டுப்பிரசுரங் கள்தாம் அதிக வேடிக்கையாக இருந்தன.