பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 111 லிருந்து பலப்பல கற்கள் நாற்புறமும் சிறறிக் கிடந்தன. இப்போதும் பல கற்கள் அங்கே அப்படியே வீழ்ந்து கிடக் கின்றன. அந்த இளமைக் காலத்தில் நானும் என் நண்பர் மற்றொருவரும் அங்கு அடிக்கடி செல்வதுண்டு. மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு எதை எதையோ பேசிக்கொண்டிருப் போம். அந்தக் கற்களும் எங்களுக்கு எத்தனை எத்தனையோ கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கும். சில நாட்களில் பொழுது போவது தெரியாமல் நன்கு இருட்டும் வரையில்கூட இருந்து பேசுவோம். - அந்தக் கோயிலின் உள்ளே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது. அதற்கு யாரும் பூசை செய்வது கிடையாது. சில ஆண்டுகளுக்குப் பின் யாரோ அதற்குக் குடமுழுக்கு செய்து ஒருவேளை பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள் என அறிந்தேன். ஆயினும் தற்போது அதுவும் நடைபெற வில்லை என நினைக்கிறேன். இக் கோயில் மிகப் பழங் காலத்தில் கட்டப்பட்டதாம். எங்கள் ஊர் இரு பிரிவாகத் தனித் தனியாக இருந்து, பிறகு காலப் போக்கில் ஒன்றாக இணைந்த ஊராம். அதில் எங்கள் தெருதான் தனி ஊராம். இந்த ஊரைச் சார்ந்த கோயிலே அது என்பார்கள். எது எப்படியாயினும் எனது இளமையின் உள்ளத்தைப்பற்றி ஈர்த்த ஒரு சில இடங்களில் அக் கோயில் உள்ள இடமும் ஒன்றாகும். அக் கோயிலிலிருந்து பார்த்தால் வடக்கே பரந்த பாலாற்று மணல் தோற்றமளிக்கும். கிழக்கே சற்றுத் தூரத்தே ஒரு கல் எல்லைக்குள் முக்கூடல் என்ற ஊர், பாலாறும், சேயாறும் கூடும் இடமாகும். அதை அடுத்து இருபுறம் சிறு மலைகள்; அவற்றிடையில் நுழைந்து செல்லும் பாலாற்றின் தோற்றம். தெற்கே பரந்த வயல் வெளிகள். மேற்கே நல்ல சோலையும் ஊரும். மால்ை வேளைகளில் அச் சோலையில் ஆயர் 'மாடுகளைக் கொண்டு வந்து மடக்கி வைத்திருந்து, பொழுது சாயச் சாய மெள்ள மெள்ள அவற்றை வீட்டிற்கு ஒட்டிக்