பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பயங்கர இரவு வாலாஜாபாத்தில் எட்டாம் வகுப்புப் படித்து முடித்த வுடன் என் தாயார் என்னை மேல் வகுப்புக்குச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள். எனது குடிக்கு நான் ஒரே மகன் ஆனதாலும், வீட்டில் வேலைகளைக் கவனிப்பதற்கு வேறு யாரும் இல்லை ஆதலாலும் என் தந்தையார் இறந்த பிறகும் கூட என் பெரியம்மா தனி யாகவே இருந்தமையாலும், ஊரில் பல்வேறு குழப்பங்கள் இருந்தமையாலும் என்னை அன்னையார் வெளியூருக்கு அனுப்ப விரும்பவில்லை, வெளியூர் செல்வார்களானால் இளம் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுவும் காஞ்சிபுரத்துக்கு எங்கள் ஊரிலிருந்து சென்ற இரண்டொரு பிள்ளைகள், படிக்காது வேறு வகை யாகக் கெட்டுத் திரும்பினார்கள் என்பதை என் அன்னையார் கண்டார்கள். ஆதலால் வெளியூர்களுக்கு அனுப்ப அவர்கள் இசையவில்லை, என்றாலும் நான் எப்படியாவது ஒரு பத்தாவது வரையாவது படித்து விடுகிறேன் என்று மன்றாடி னேன். என் பாட்டியாரும் எனக்குத் துணையாகப் பேசி னார்கள். தான் உடன் வந்து சமைத்துச் சோறிட்டுப் பாது காத்துக் கொள்வதாகவும், காஞ்சிபுரத்துக்கன்றிச் செங்கற் பட்டுக்கு அனுப்பினால் நல்லது என்றும் சொன்னார்கள். அப்போதும் என் அன்னையார் இசையவில்லை. அவர் களுடைய எண்ணமெல்லாம் ஒன்றேதான். எப்போதும் என்னைத் தன் மேல் பார்வையில் வைத்துக்கொண்டு, நல்ல வனாக ஆக்கி வளர்க்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். பிறகு வாலாஜாபாத் தில் அப்பா' வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் ஒரு நாள் ஊருக்கு வந்தார்கள் அம்மாவைக் கண்டார்கள். 'தம்பி பரமசிவம் கெட்டிக்காரப் பிள்ளை. மேலே படித்தால், நன்றாக முன்னுக்கு வரும். ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். அப்படி ஒன்றும் கெட்டு