பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் - 129 வென்று கேட்கவில்லை. என்னைப்பற்றி மற்றவரிடமும் ஒன்றும் கூறவில்லை. நடு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி நீண்ட பிரம்பால் ஓங்கி ஒரடி கொடுத்துப் போ' என்றார். எனக்கு அப்போது அழுகையும், ஆத்திரமுமாக இருந்தது. என்றாலும் நாளாக ஆக அந்த அடி-ஒரே பிரம்படி-என் வாழ்வை எவ்வளவு தூய்மையாக்கிற்று என்பதை எண்ணும் போது என்னை அறியாமலே என் வாய் அவரை வாழ்த்திற்று. அவர் இன்னும் தஞ்சையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அந்தப் பொல்லாத பிள்ளைகளோடு நான் சேரக்கூடாது என்பது தான் அவர் விருப்பம். என் நடத்தையையும் நான் பள்ளி வந்து செல்லும் விதத்தையும் கண்டுகொண்டே வந்த அவர், நான் எப்படியோ அந்த பொல்லார் குழுவில் அகப் பட்டதை அறிந்தார். அந்தக் கூட்டத்தை முறிக்கவே அன்று அவர் அத்தகைய அடியினைக் கொடுத்தார். உடன் அவர் களையும் அழைத்து வந்து அடித்திருப்பாராயின், எல்லாரும் அடிபட்டோம் என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வேளை நான் அவர்களோடு சேர்ந்து இருந்திருப்பேன். அதனாலேயே அவர் என்னை மட்டும் தனியாக அழைத்துத் தண்டனை தந்தார். அவர் குறிப்பை அறிந்தோ அறியாமலோ நான் அன்று முதல் அவர்களோடு சேருவதில்லை. தூர விலகிவிடு வேன். அந்த அடி இல்லையானால் நான் ஒரு வேளை இன்று புகை பிடிப்பவனாகவோ, வேறு கொடுமையாள னாகவோ மாறிவிட்டிருப்பேன். ஆம்! அந்தப் பிரம்படி என்னை வாழ்வித்தது. பல ஆண்டுகளுக்குப் பின் பல்கலைக் கழகத்தில் அந்த ஆசிரியரைக் கண்டேன். நான் அடியால் நலம் பெற்ற ஆண்டுக்கு மறு ஆண்டே அவர் செங்கற்பட்டைவிட்டுச் சென்றுவிட்டார். பல ஆண்டுகள் கழித்துப் பல்கலைக் ஆ-9