பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 ஆனந்த முதல் ஆனந்த வரை சிறிது நேரம் கழித்து அந்த நண்பனுடைய ஒரு ரூபா யுடன் நாங்கள் அந்தச் சாமியார் இருந்த இடத்திற்குச் சென்றோம். அரைமணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். அங்கு நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் எங்களுக்குத் தெரிந்தவர்தான். நாங்கள் அங்கு சென்று நின்று சுற்றிப் பார்த்தோம். அவர் என்ன தம்பி பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். இங்கு ஒரு சாமியார் இருந்தார். அவரைப் பார்க்கிறோம் என்றேன். உடனே அவர் சரிதான், நீங்கள் ஏமாந்துவிட்டீர்களா? எவ்வளவு கொடுத்தீர்கள்’ என்றார். அவர் அந்தச் சாமியாரைப் பற்றிப் பல வகையில் பழித் துரைத்தார். நாங்கள் நடந்த கதை அத்தனையும் சொல்லி முக்கால் ரூபாய் கொடுத்ததையும் மேலும் ஒரு ரூபாய் கொடுக்க முன் வந்ததையும் கூறினோம், அவரும் அவருடன் இருந்தவர்களும் சிரித்தார்கள். சரி உங்கள் ஒரு ரூபாய் நல்ல ரூபாய்’ என்றார்கள். மேலும் அந்தச் சாமியார் கள்ளச் சாமியார் என்றும், விரல் நக இடுக்கில் விபூதி, குங்குமத்தை வைத்திருந்து, எங்கிருந்தோ வரவழைப்பது போலக் காட்டி ஏமாற்றிப் பெண்களையும், குழந்தைகளையும் மிரட்டிப் பொருள் பெறுகிறவர் . என்றும் கூறினார்கள். அவர்கள் வரும் போது அந்தச் சாமியார் அங்கிருந்து நழுவி விட்டார் என்றும், அவர் பக்கத்தில் உள்ள ஒரு கள்ளுக் கடைக்குச் சென்றிருக்கலாமென்றும் கூறினார்கள், நான் உடனே அவர் களுடன் கள்ளுக்கடைக்குச் சென்றேன். அந்தச் சாமியாரைத் தேடினோம். கிடைக்கவில்ன்ல. என்றாலும் சிறிது நேரத்துக்கு முன்தான் சாமியார் தோற்றத்தில் வந்து எட்டணாக் கள்ளும் நாலணாக் கறியும் உண்டு ஒருவர் சென்றார் என்பதை அறிந்தோம். எங்களை அழைத்து வந்த அக்கடைக்காரர் தான் சொல்லியதை எங்களுக்கு விளக்கி, அந்த ஆசாமிதான் எங்களை ஏமாற்றியது எனக் காட்டி இனி அந்த வகையில் ஏமாறாது, மிக எச்சரிக்கையாக