பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் † 43 அவர்கள் போட்டுக் கொண்டிருந்த மூக்குத்தி அது. அந்தக் காலத்தில் அவர்கள் ஆற்றில் மூழ்கும் வழக்கம் உண்டு. இன்றும் எங்கள் ஊரில் பெண்களும் ஆண்களும் பெரும் பாலாராக ஆற்றில் சென்று நாள்தோறும் மூழ்கி, ஆடை துப்புரவு செய்துகொண்டு வருவது வழக்கம். வேலையற்ற வர்களில் சிலர்தான் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லவும் சோம்பற்பட்டு வீட்டுக் கிணற்று அடிகளிலே குளித்துவிடு வார்கள். அன்றும் பெரும்பாலோர் ஆற்றுக்குச் சென்று குளிப்பது போன்றே என் அன்னையாரும் நாள்தோறும் ஆற்றுக்குச் சென்று குளிப்பார்கள். அப்படிக் குளிக்கும் போது ஒருநாள் அந்த முக்குத்தி ஆற்று நீரில் கழன்று வீழ்ந்துவிட்டதாம். எங்கள் ஆறு பாலாறு. அதில் எப்போதோ ஒருமுறை வெள்ளம் வரும், மற்றக் காலங்களி லெல்லாம் ஊற்றுப் பெருக்கால்தான் நாங்கள் உய்ந்து வந்தோம். அன்னை ೧76೧ಿಗೀT வாக்கு பிற ஆறுகள்வழி மெய்யோ அன்றிப் பொய்யோ என்றாலும்கூட எங்கள் பாலாறு அவர் வாக்கை மெய்யாகவே ஆக்கிவந்தது. “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அங்காளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்’ என்ற ஒளவை வாக்கை நாங்கள் மறக்காமல் செய்து வந்தது பாலாறு. அந்த வரண்ட ஆற்றுச் சிறு ஊற்றுப் பள்ளத்திலே மூழ்கி வந்த என் அன்னையாருடைய மூக்குத்தி கழன்று மேல் பாகம் தண்ணிரில் வீழ்ந்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும் அடிப்பாகம் மட்டும் கீழே விழுந்ததாம். மேல்கல் வைத்துச் செய்த அந்த மூக்குத்தி காணவில்லையாம். உடனே அவர்கள் இரண்டொருவருடன் ஆற்றுக்குச் சென்று குளித்த இடத்தில் தேடினார்களாம். சிலமணி நேரம் துருவித் துருவித் தேடியும் கிடைக்கவில்லையாம். சரி போகட்டும்,