பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஆனந்த முதல் ஆனந்த வரை நம்முடையதாக இருந்தால் என்றாவது கிடைக்கும்' என்று விட்டு வந்துவிட்டார்களாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. என் அன்னைக்கும் அது இன்று தேவை இல்லை. கணவனார் மறைந்தபின் அதனால் பலன் என்ன? நிற்க இரண்டு ஆண்டு களுக்கு இடையில் இரண்டு மூன்று முறை பெருவெள்ளம் ஆற்றில் வந்தது. மேடு பள்ளமாயிற்று. பள்ளம் மேடா யிற்று. வாய்க்கால் தூர்ந்தது, புது வாய்க்கால் வெட்டி இருப்பார்கள். அதுவும் தூர்ந்து அடுத்தடுத்து வந்த வெள்ளம் கழித்துப் புதுப் புது வாய்க்கால்கள் தோன்றி இருக்கும். இந்த நிலையில் அன்று தொலைந்த மூக்குத்தி எப்படிக் கிடைக்கும்? புதிதாக வெள்ளம் வந்து வற்றியபின் கால்வாய் தோண் டினார்கள். கீழ் மண் எல்லாம் மேலாகப் புரள, இடையில் சிறு ஊற்று ஒடிக்கொண்டிருந்தது. அந்த மூக்குத்தி கொண்டு வந்தவரும் இன்னும் அவருடன் பொழுதுபோக்குக்காகச் சுற்றிக் கொண்டிருந்த இரண்டொருவரும் முன்னாள் மாலை அந்த ஊற்றுக் கரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்களாம். பேச்சோடு கையும் சும்மா இராமல் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்ததாம். ஒருதரம் மண்ணைத் தள்ளும்போது மண்ணுடன் இந்த முக்குத்தியும் புரண்டு வந்ததாம். மண்ணொடு மண்ணாக நிறம் குன்றி ஏதோ சிறு மண்கட்டி என இருந்ததை அவர்கள் எடுத்துத் துடைத்துப் பார்க்க அது மூக்குத்தியாய்த் தெரிந்ததாம். உடனே அது யாருடையது என்ற கேள்வி எழுந்திருக்கும். அந்தப் பொழுதுபோக்கும் பெரியவருக்கு ஊர்க் கதை எல்லாம் தெரியுமாதலால், யோசித்து அது என் அன்னையுடையதாகத் தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தாராம். மறுநாள் அதை எடுத்துக்கொண்டு வந்து என் அன்னை கையில் கொடுத்துத்தான் கைக்கூலியாக மண்டகப்படியின் பெயரால் ஒரு ரூபாய் வாங்கிச் சென்றார்.