பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 195 எனது மணவாழ்வு மங்கியது என்று கூறினேன். அது பற்றிய தொடர்பு நீண்டுகொண்டே வந்தது. என்னுடன் பணியாற்றிய பல ஆசிரியர்கள் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தனர். நான் சொல்வதறியாது திகைத் தேன்-சிலவேளைகளில் தனிமையில் கண்ணிர்விட்டுத் கதறி அழுதேன். எனினும் அவர்கள் அதுபற்றியெல்லாம் அறிந்து, என்னை அறியாமலே ஒருசெயலை மேற்கொண்டனர். அவருள் ஒருசிலர்-நான்கைந்துபேர் என நினைக்கிறேன்அவர்கள் வீட்டிற்குச்சென்று பேசினர். நெடுநேரம் பலப் பலவற்றைப் பேசினார்கள் போலும். என்றாலும் முடிவு ஒன்றும் பயன்தரத்தக்கதாக இல்லை. பின் அவர்களுள் ஒரிருவர் என்னிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, வருந்தினர். வந்த அவர்களுள் யாருடன் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் தம் மகளை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அல்லது அவர்கள் வீட்டு வேலைக்காரருடனும் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், என்னுடன் வாழ அனுப்பமுடியாது என்றும் என் மாமனார்கூற. மாமியார் ஆமோதிக்க அவர் வீட்டு ஒரே மூதாட்டியாக இருந்த பாட்டிக்கிழவியும் சரி என்று சொல்ல, சென்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் என அறிந்தேன். இதை நேரில் கேட்டறிந்த என் உடன் ஆசிரியர்கள் என் பொருட்டு மிகவும் வருந்தினர். நான், அப்படியாவது யாருடனாவது சென்று வாழவிரும்பின் அப்பெண் வாழட்டும் என்று எண்ணினேன். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. மாமியார் விட்டு வசவு மட்டும் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. பார்ப்பவர்கள் ‘எல்லாருக்கும் நல்லபிள்ளையாக இருக்கும் நீ எப்படி மாமியார் வீட்டுக்கு மட்டும் பொல்லாதவனாகிவிட்டாய்? என்று இரக்கப்படுவார்கள். ஆயினும் இந்தக் கொடுமைக் கெல்லாம் காரணம், அவர்கள் என்னைக்காட்டிலும் எங்கள் சொத்தின் பேரிலேயே கண்வைத்தமையும் அதை அவர்கள் விருப்பம்போல் தராமல் அன்னையார் கட்டிக் காத்தமையும்