பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 209 அப்போது தீபாராதனை நடந்துகொண்டிருந்த நேரம் என் நினைக்கிறேன். தீபாராதனை முடியும் வரை நின்றிருந்தேன். கூட்டம் கலைந்தது, முருகன் அருகில் சென்று அழுதேன்அலறினேன். அருகில் இருந்த ஐயர் கூடத் தவறாக எண்ணி இருப்பர். நான் என்ன செய்வது? அடுத்துச் செய்ய வேண்டியது அறியா நிலையில் நான் வேறு என்ன செய்ய முடியும். வாய் பாடிற்று, கண் அவனைக் கண்டு நின்றது. கருத்து ஒரு வழிபட்டது என எண்ணுகிறேன். யாரும் பக்கத்தில் இல்லை. ஏதோ ஒர் அசைவினை உளத்தில் பெற்றேன். எங்கோ பேசுவது கேட்டது. 'வீட்டிற்குத் திரும்பிப்போ' என்ற ஒலியாக அது என் காதில் விழுந்தது. தலைதூக்கி நிமிர்ந்தேன். முருகன் முன்னே சிரித்துக்கொண் டிருப்பது போன்ற நிலை உணர்ந்தேன். திரும்பிச் செல்ல வேண்டுமோ? என்று உள்ளம் கேட்டது. "ஆம்" என்று உள்ளத்திலிருந்து ஒலி கிளம்பிற்று. அப்படியே நெடுநேரம் நின்றிருப்பேன். பலர் வந்து சென்றிருக்கக் கூடும். அடுத்த பூசைக்கு நேரமானதால் என்னை வெளியே செல்லச் சொன்னார்கள். நான் அன்னையார் இருவரையும் வணங்கி, மறுமுறை அத்தனுக்கு வணக்கம் செலுத்தி மும்முறை வலம் வந்து வெளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் சுய உணர்வு வரப்பெற்றேன். உடன் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டன. திரும்பிப் போகவா? என்ற கேள்விக்கு விடையும் பெற்றேன். தணிகை முருகன் முன் மண்டபத்தில் நான் உட்கார்ந் திருந்த நிலையில் உள்ளம் என் அங்கம்பாக்கம் சென்றது. என் கடிதத்தைக் காண்பார்களாயின் அன்னையின் உள்ளம் எவ்வளவு கொந்தளிக்கும்-கொதிக்கும்-வாடும்-வருந்தும் என எண்ணினேன். முருகன் எதையோ நினைந்துதானேவருங்காலத்தை அறிந்த காரணத்தால்தானே-திரும்பச் சொல்லியுளான் என எண்ணினேன். உடனே திரும்ப ஆ-14