பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 231 தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவோரும் எழுதுவோரும் சிலரே. ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பு-இந்தி பயின்றால் ஏற்றம் சமஸ்கிருதம் கற்றால் சிறப்பு என்றெல்லாம் சிலர் எண்ணிக்கொண்டு செயலாற்றிய காலம் அது. எனவே முதலமைச்சர் பதவி ஏற்ற ஆச்சாரியார் தமிழ்நாட்டிலும் பிற சென்னை மாநிலப் பகுதிகளிலும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினர். ஒவ்வொருவரும் இந்தி படித்தாலன்றி வாழ் வில்லை என்ற நிலையை உண்டாக்கிவிட்டார் அவர். இன்று அவர் பேசுவதையும் எழுதுவதையும் அறிபவர் அன்றைய அவர் செயலைக் கேட்டால் கொதிப்பர். நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்தது. இந்தி எதிர்ப்புப் போர் தமிழ்நாட்டில் வீறுகொண்டு நடைபெற்றது. பெரியார் அதில் முன்னணியில் இருந்தார். இன்றைய அமைச்சர் பலர் பிறவாத அந்த நாளில்-தமிழ் முழக்கம் செய்யும் நல்லவர் காணாத அந்த நாளில், ஆச்சாரியார் செயலுக்கு உள்ளாகி அல்லலுற்றார் பலர். காஞ்சியிலும் அத்தகைய கிளர்ச்சி எழுந்தது. பல கூட்டங்கள் நடைபெற்றன. நானும் பலவற்றில் பேசினேன். சிலவற்றில் தலைமை வகித்தேன். அதுபோது காஞ்சி நகர சபை, காங்கிரஸ் ஆதிக்கத்கில்-திரு. டாக்டர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் இயங்கிற்று என எண்ணுகிறேன். நான் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்ததை அவர் பெருங்குற்றமாகக் கருதினார். படிக்கும் காலத்தில் நான் காங்கிரஸ் சார்பில் இருந்து, காந்தி அடிகள் தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது செங்கற்பட்டில் பல கூட்டங்கள் நடத்தினேன். எனினும் பிறகு நான் அரசியலில் அதிகமான பங்குகொள்ளவில்லையானாலும் காங்கிரஸ் சார்பிலேயே இருந்தேன். அக்காலத்தில் நன்கு தெளிந்த, பொதுமக்களொடு தொடர்பு கொண்ட வேறு கட்சிகள் இல்லையாதலால் நான் மட்டுமின்றிப் பலரும் அவ்வண்ணமே இருந்தனர். எனினும் எதிலும் தீவிரமாகப்