பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஆனந்த முதல் ஆனந்த வரை தேர்தல்களை நடத்தத் தொடங்கினர். அந்த அரசியல் சூழ லில் சிக்கிய நானும் செங்கற்பட்டு மாவட்டத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன். எனினும் அவ்வளவு தீவிரமாக வேலைசெய்ய வில்லை. என் பள்ளியின் தலைவரோ, அர சாங்கம் தடுத்தாலும் நான் நிற்பதற்கு இசைவு தருவதாதக் கூறினார். அவருக்கு மேலுள்ள ஆங்கில நாட்டுச் செய லாளரும் இசைவும் வாழ்த்தும் தந்தார். என்னிடம் பயின்ற என் மாணவர் கூட்டம் அப்படியே ஊர் ஊராகப் படை எடுக்கத் தயாராகக் காத்துநின்றது. இத்தனைக்கும் இடை யில் நான் தேர்தலில் நிற்க முடிவு செய்தாலும். நான் அது வரை சார்பு பற்றி இருந்த காங்கிரஸ் அடிப்படையிலேயே நிற்க நினைத்தேன். எனவே அதற்கென விண்ணப்பம் செய்தேன்; ஆனால் நான் இந்தி எதிர்ப்பில் பங்கு கொண்ட காரணத்தால் மறுக்கப்பெற்றது. எனவே நான் தனியாக நிற்க முடிவு கொண்டேன். இடையில் மற்றொரு சிக்கலும் இருந்தது. செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துக்கு அத்தொகுதியின் சார்பில் பதினைந்து ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஒருவர் மறுபடியும் போட்டியிட நினைத்தார். காங்கிரஸ் சார்பில் ஒருவர், இவர். இவர்களுக்கிடையில் நாம் ஏன் தலை யிட வேண்டும்; ஒதுங்கிவிடலாம் என்று நான் எண்ணிய வேளையில் என் அன்னையர் இருவரும் ஒருசேர நான் நின்றே ஆகவேண்டும் என வற்புறுத்தியதோடு பல ஊர்களிலிருந்து முக்கியமானவர்களை வரச்சொல்லி நான் நிற்கப் போவதை யும் கூறிப் பறைசாற்றி விட்டார்கள், எவ்வளவு செலவானா லும் நின்று வெற்றிபெற வேண்டும் என அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தொடர்ந்து உறுப்பினராக இருந்து மேலும் நிற்க விரும்பியவரும் அவரைச் சேர்ந்தவர்களும் என்னையும் என் குடும்பத்தையும் இழிவாகப் பேசினர், வீட்டில் ஆண் துணை