பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஆனந்த முதல் ஆனந்த வரை மறுத்துவிட்டேன். திரு. V. K. இராமசாமி முதலியார் போன்ற பெரியவர்களெல்லாம், பின் பல இடங்களுக்குச் சுலபமாக வரும் வகையில் என்னைப் போட்டி இடச் சொன் னார்கள். ஆயினும் அவர்கள் வேண்டுகோளையெல்லாம் மிகத் தாழ்மையோடு மறுத்துவிட்டேன் நான். இவ்வாறு இத்தேர்தல் விழா-வெற்றி என் வாழ்நாளிலேயே ஒரு நிலைத்த கொள்கையை நான் மேற்கொள்ள உதவி செய்தது. அதைப் போற்றுவதன்றி வேறு என்செய வல்லேன்? நான்கைந்து ஆண்டுகள் நான் மாவட்டக் கழக உறுப் பினனாக இருந்தேன். அதுபோது திருவாளர் முத்துரங்க முதலியார் அவர்களும் எங்களோடு அதே சபையில் உறுப் பினராக இருந்தார். ஆதம்பாக்கம் திரு. துரைசாமி ரெட்டி யார் அவர்கள் தலைவராக இருந்தார். நாங்கள் எதிர்க்கட்சிக் காரர். எங்கள் தலைவர் திருவொற்றியூர் சண்முகம்பிள்ளை அவர்கள். எங்களால் முடிந்த அளவு நாங்கள் கூட்டங்களில் ஈடு கொடுத்தோம். திரு. துரைசாமி ரெட்டியார் நல்லவராத லின் எங்கள் வேண்டுகோள்களையும் ஏற்று அவ்வப்போது வேண்டிய உதவிகளை எங்களுக்கும் செய்து வந்தார். எனவே எங்கள் பணி செவ்வையாக நடைபெற்றது. எனி னும் சில தலைவர்கள் எங்களை வேற்றுக்கண்ணோடே நோக்கிய நிலை வருந்தத் தக்கதாக இருந்தது. நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. என்னொடு முதலில் , கைகுலுக்கி என்னை வாழ்த்திய அன்பர் அத்துடன் நிற்க வில்லை. அன்றைய அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு மிக்கவராக இருந்தமையின் அரசாங்க வழியே தொல்லை கொடுக்க முயன்றார். நான் பணியாற்றிய பள்ளி அரசாங்க மானியம் பெறுகின்ற பள்ளி ஆனமையின் நான் அதில் பணி செய்துகொண்டே, மாவட்டக்கழகத்தில் உறுப்பினராக இருக்க முடியா தென்றும், இரண்டில் ஒன்றை விட்டுவிட