பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ஆனந்த முதல் ஆனந்த வரை புரிசை சு. முருகேச முதலியார் அவர்கள் அவர்களைப் பாராட்டி அப்படியே என்றும் இருக்க வேண்டும் என வாழ்த் தினர். ஆனால் அந்த நிலை தொடர்ந்து இல்லை. | இருவரும் மகப்பேற்றிற்காக அவரவர் தாய் வீடு சென் றனர். முன்னவள் பிறகு திரும்பவே இல்லை. பிள்ளை பிறந்ததையும் கூட அவர்கள் எனச்குச் சொல்லி அனுப்ப வில்லை. கருவளர் சிறப்பு நடைபெற்றபடியே, மக்களும் இன்று ஒருவர் நாளை ஒருவராகப் பிறந்தார். பின்னவளுக்கு பெண்மகவு பிறந்த செய்தியைச் சொல்லி அனுப்ப என் முதல் மகளைக் காண விரைந்து உக்கலுக்குச் சென்றேன். இளங் குழந்தையைக் கண்டேன். என் பெரிய அன்னையார் அங்கேயே இருந்தனர். நான் அங்கே சென்ற அதே நாளில் முதல் குழந்தை பிறந்த மறுநாளில் முன்னவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதை அவர்கள் வீட்டார் சொல்லி அனுப்பவே இல்லை. உடனே ஆஊரில் இருந்த என் அன்னையார் எனக்கு ஆள் அனுப்பினர். அவர்கள் எவ்வளவு வெறுத்தும் தாம் சென்று பேரனைக் கண்டுவந்தனர். அனுப்பிய ஆள் வந்து செய்தியைச் சொன்னபோது நான் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த வேளை யில் நல்ல செய்தி கேட்டால் பயன் விளைவதில்லை என்று எப்படியோ ஒர் எண்ணம் என் உளத்தில் முளைத்தது. எனவே நான் அஞ்சினேன். (அப்படியே இரண்டு ஆண்டு களுக்குள் அவன் மறைந்தான்). இருவரும் முன்னரே தத்தம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததை நான் அறிவேன். அவர்கள் விருப்பில் நான் குறுக்கிடவில்லை. மகள் மங்கையர்க்கரசி எனவும் மகன் மயில்வாகனன் எனவும் பெயர் பெற்றனர். மங்கையர்க் கரசியும் தாயும் சில திங்கள் கழித்துக் காஞ்சிபுரம் வந்து குடும்பத்தில் ஒன்றிவிட்டனர். ஆனால் மயில்வாகனனோ அவன் தாயாரோ திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை.