பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 251 ஊரில் இருந்த என் அன்னையார் மட்டும் பேரனைக் காணவேண்டும் என்ற அவாவினால் யாரிடமாவது சொல்லி அனுப்பி எடுத்துவரச் சொல்லிக் கண்டு மகிழ்வர். ஆனால் அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை. சில திங்கள் கழித்து, பிள்ளையைக் கொடுத்தனுப்ப முடியாது என மறுத்து விட்டனர். என் அன்னையாரும் அக்கொடுமையைத் தாங்க மாட்டாது எங்களோடு காஞ்சிபுரம் வந்து சேர்ந்து விட்டார்கள். அடுத்த ஆண்டிலே அன்னையர் இருவரையும் மைந்தனையும் ஒரு சேரப் பிரிய வேண்டிய சோகநிலை உருவாயிற்று. இறைவன் ஏனோ எனக்கு உறுதுணையா யிருந்த அன்னையர் இருவரையும் ஒருசேர எடுத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் இருந்த காரணத்தால் நான் குடும்பப் பொறுப்பையோ வேறு விளை நிலங்கள் கொடுக்கல் வாங்கல் ஆகிய பிற பொறுப்புக்களையோ எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. இறைவன் நானே முயன்று என் காலிலேயே நிற்க வேண்டிய பொறுப்பை உணர்த்தத் தானோ அவ்வாறு செய்தான் என எண்ணவேண்டியிருந்தது. என் அன்னையாருக்குக் காலில் கட்டிகண்டது. ஊரில் வைத்தியம் செய்து பயனடையாமல் போகவே, காஞ்சிபுரம் வந்து வீட்டிலிருந்து கொண்டே நல்ல மருத்துவமும் அறுவை சிகிச்சையும் செய்தோம். எனினும் ஒன்றும் குணமாக வில்லை. தை மாதத்தில் ஒர் வெள்ளிக்கிழமையில் அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறையுமுன் அவர்கள் கூறிய சொல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தூரத்தே நின்றிருந்த என்னை அருகழைத்து நான் வருகிறேன், தேங்காய் உடை, கற்பூரம் கொளுத்து என்றனர். அவர்கள் சொல்லியதைச் செய்து முடிப்பதற்குள் அவர்கள் தலை சாய்ந்தது. மலை என வளர்ந்த என் வாழ்வும் மங்கியது; வாடினேன். பெரிய அன்னையாரும் பிறரும் தேற்றினர். ஏனோ தெளிவு பிறக்கவில்லை. பிறகு அந்த ஆண்டு