பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஆனந்த முதல் ஆனந்த வரை இந்த வாழ்க்கை வரலாற்றை நான் ஏர்க்காட்டில் என் குறிஞ்சி மனையில் எழுதிக் கொண்டிருந்தபோது அடிக்கடி உள்ளே ஊர்ப் பக்கம் செல்லுவேன். வழியில் உள்ள கிறித்துவக் கோயிலைக் கடந்தே செல்ல வேண்டும். அதன் p.&%u%i) 'The Just Shall have Him on Faith' ςτςίτρ/ எழுதப் பெற்றுள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது எனக்குப் புலனாகும். ஆம். நல்லவர் வாழ்வெல்லாம் அந்த நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து வளர்ந்தது தானே. எனவே நானும் அந்த நம்பிக்கை அடிப்படை யிலேயே வாழ்வை அமைத்துக் கொண்டேன். . கிறித்து பிறந்த நாளையும் ஆண்டுப் பிறப்பையும் போற்றிய வகையை மேலே காட்டினேன். அந்நாட்களில் தேவாரத்தில் கயிறு சாத்திப் படிப்பதை மேலே கூறினேன். அதில் வரும் பாடல்கள் வழி அந்த ஆண்டு நிகழ்ச்சியை அமைத்துக் கொள்வேன். வீட்டில் என் செல்வி மங்கை வளர்ந்து வந்தாள். அவளுக்கு மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில் எங்கள் உள்ளத்தில் மகன்' இல்லையே என்ற குறை உண்டாயிற்று. முன்னவள் வழி இருந்த மகனும் மறைய, நம் குடிக்கு நல்ல மகன் தோன்ற வேண்டுமே என்ற எண்ணம் தலைதுாக்கிற்று. அதுகாலையில்தான் கிறித்தவப் புத்தாண்டு தொடங்கப் பெற்றது. அந்த ஆண்டின் தொடக்க நாளில் நான் சம்பந்தர் தேவாரத்தில் கயிறு சாத்தினேன். கேடிலியப்பருக்குக் கிடைத்த அதே வெண்காட்டுப் பதிகம் எனக்கும் கிடைத்தது. அப்பதிகம் அனைவரும் அறிந்ததே, அதிலும் அப்பாடல் எல்லாரும் அறிந்த ஒன்றே. என்றாலும் எழுதுகிறேன். பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளகினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’