பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சென்னை வாழ்வின் தொடக்கம் சென்னை வாழ்க்கை இன்பமான நிலையிலேயே தொடங்கப்பெற்றது. சென்னை நகரம் எனக்குப் புதிய தன்றே. எத்தனையோ முறை நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும்கூட நான் சென்னையில் தங்கியுள்ளேன். என் மேல் படிப்புக்காக நான் எழும்பூரில் சில திங்கள் தங்கிய துண்டு. அக்காலத்திலெல்லாம் பழகிய பல பெரியவர்கள் என் சென்னை வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்தனர். எனினும் 1944, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். 1942இல் சென்னையே அல்லோல கல்லோலப்பட்டுக் காலி செய்யப் பெற்றிருந்த நிலைமாறி, இடம் கிடைக்காத ஒரு சூழல் உருவாகியிருந்தது. எனவே நான் சென்னையில் கால் வைத்தபோது இடநெருக்கடி உண்டாகியிருந்தது. எனினும் இதை நான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து (1969இல்) எழுதும் போது விரிவடைந்த சென்னை நகரத்தில் உள்ள நெருக்கடி அப்போது இருந்ததில்லை. சென்னையில் மிகப் பழைய பச்சையப்பர் கல்லூரியில் தமிழாசிரியர் பதவி பற்றிய விண்ணப்பம் குறித்த விளம்பரம் வந்தது. நானும் ஒரு விண்ணப்பம் அனுப்பினேன். காஞ்சி யின் பள்ளியை விட்டபோது இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று நான் எண்ணவில்லை. என் கிராமத்தில் சென்று பயிர்த் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை' என்ற எண்ணமே என் உள்ளத்தில் சுழன்றுகொண்டிருந்தது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றபடி அந்த வாழ்வையே நான் விரும்பினேன். அதனால் எங்கள் நிலங்களைச் செம்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டேன். பல அண்டை நிலங்களை அணைத்து, மாற்றிச் சதுரங்களாக்க முயன்றேன். தென்னங் கன்றுகளை வைத்துப் பயிரிட ஏற்பாடு செய்தேன். எங்கள்