பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 ஆனந்த முதல் ஆனந்த வரை உலகில் ஒருவனாக வாழ்ந்தமைக்கு ஏற்ற சின்னங்களுடன் பணி யாற்றுவேனென்றோ, அதேவேளையில் சில கல்வி நிலையங் களை உருவாக்குவே னென்றோ நான் கனவிலும் நினைக்க வில்லை. ஒய்வுபெற நிற்கும் இந்த ஆண்டில், இந்த வாழ்க்கைக் குறிப்பை எழுதும் நிலையில் அந்த நாள் என்முன் ஒளிவிடுகின்றது. ஆம்! 1944இல் பச்சையப்பரில் கால்வைத்த நான் பல வாழ்வின் மேடுபள்ளங் களைக் கண்டு பல்வேறு மக்களொடு பழகி, பல்வேறு அனுபவங்களைப் பெற்று வாழ்ந்து இன்று இந்தக் குறிப்பை யும் எழுதுகிறேன். முடிவுரை' என் காஞ்சி வாழ்வு எட்டு ஆண்டுகளே யாயினும் அந்த எட்டு ஆண்டுகள் என் வாழ்வில் எதிர்பாராத வகையில் பலப் பல அனுபவங்களையும் வாழ்வின் சூழல்களையும் பெற எனக்கு உதவின. எனலாம். இளமை கடந்து, காளைப் பருவமாகக் கழிந்த அந்த எட்டு ஆண்டுகளில் நான் காஞ்சி யில் நல்லவரோடு கலந்து பழகி நலம் பெற்றிராவிடின், என் பிற்காலம் எப்படி அமைந்திருக்கும் எனச் சொல்ல முடியாது. கிராமங்களிலிருந்து காஞ்சிபுரத்துக்கு அக்காலத்தில் படிப்பிற் காகவும் பிற செயல்களுக்காகவும் வந்த என் உறவினர் சிலர் நிலைகெட்டமையின் என் அன்னையர் என்னைக் காஞ்சிபுரம் அனுப்பவே அஞ்சினர் என்பதை நூலுள் குறித்துள்ளேன். எனவே அவர்கள் அச்சத்தைப் போக்கும் வகையிலும் மிக எச்சரிக்கையாக நான் நடந்து கொண்டு, நல்ல பெயருடன் காஞ்சியைக் கடந்து சென்னை வந்து சேர்ந்தேன்.

  • நூல் வெளியீட்டின்போது (1980) எழுதியது.