பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 3.29. கூறி, கீழ் உள்ளவர்கள் அதிகம் வாடகை தருகிறார்கள். நான் இருக்கும் பகுதி வேறு, மேல் அவர்கள் சாமான் வைத்துள்ள அறைகள் வேறு. இவைகளுக்கெல்லாம் அதிக வரி போட வேண்டும் என்று கூறியதொடு நீண்ட கடிதமும் எழுதினார். நான் திரும்பி வந்தபோது எழும்பூரிலிருந்த அவ்வாணையரை வேறு காரணத்துக்காக காணச் சென்ற போது, இவற்றையெல்லாம் கூறி, அக்கடிதத்தினையும் காட்டினார். பிறகு நீங்கள் வந்த பிறகு இதைக் காட்டவே வைத்திருந்தேன்’ என்று கூறி நான் படித்தபின் அதைக் கிழித் தெறிந்தார். பின் எல்லாரிடமும் விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கூறி வாழ்த்தி அனுப்பினார். இன்று அந்த இருவருமே இல்லை. முன்னவரைப் பற்றி இன்னும் t_j Gl) கூறலாம். எனினும் இல்லாதவரைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என அமைக்கின்றேன். இவ்வாறு பத்து மாதங்கள் அன்னை வயிற்றில் கரு தங்கியதுபோல் அன்னை அங்கயற்கண்ணியினை நாள் தோறும் கண்டு கொண்டே இருந்து அடுத்த மார்ச்சு மாதக் கடைசியில் சென்னை வந்து சேர்ந்தேன். இருக்க இடம் இல்லாத காரணத்தால் பிள்ளைகள் இருவரையும் கோவை மருகர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் மேலறையில் தங்கினேன். நாள்தோறும் குடியிருந்த நல்ல வரை வேண்டி வேண்டி விரைவில் காலி செய்யுமாறு கூறினேன். அப்போது செனாய் நகரின் ஒரு பகுதியில் சில வீடுகளைக் கட்டி மாநகராட்சியினர் பலருக்கு ஒதுக்கி வந்தார்கள். நான் மேலே கூறிய ஆணையரைக் கண்டு, அவர் நண்பர் முன்னரே விண்ணப்பம் செய்திருந்தமையால், விரைவில் ஒரு வீடு ஒதுக்கித் தந்து, எனக்கு விடுதலை அளிக்கு மாறு வேண்டினேன். அவர்தம் நண்பரும் அடிக்கடி சென்று கேட்டிருப்பார். அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு ஒதுக்கப் பெற்றது. நான் துயரிலிருந்து விடுதலை பெற்றேன். சூன்