பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 3 : தொடங்கியது என நினைக்கின்றேன். உடன்பிறந்தவர்களா யிருந்த அன்னையும் பெரியன்னையும் மாறுபடத் தொடங்கி னார்கள். என் அப்பாவுக்கும் என் பெரியப்பாவுக்கும் தனித்த முறையிலே நிலபுலன்கள் ஒன்றும் கிடையாது போலும். எனவே இருவரும் மாமியார் வீட்டிலே வந்து தங்கி விட்டார்கள். அவர்கள் தங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பினார்கள். என் தந்தையாரோ இளமையின் விளையாட்டில் தையலார் மையலிலே தாழ்ந்து விழுந்து விட்டார்’ என்பார்கள். ஊரில் சில நல்லவர்'கள் அவரை அவ்வாறு கெடுமாறு செய்த பணிக்கு முதலாளியாக இருந் தார்கள் என அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என் தந்தையார் பெருஞ் செல்வர் அன்றேனும் தாராள குணமுடையவர். நாளைக்கு என்று பாராது எதையும் யாருக்கும் வாரிவழங்கும் நிலையில் வாழ்ந்துவந்தார். அவருக்கும் அன்னையும் பெரியன்னையும் இருந்தார்கள். அவர்கள் இவருக்கு வேண்டியவற்றைக் கொடுத்துக் கொண்டே வந்தமையாலும் ஊரில் நல்லவர் நாலுபேர் இவரைச் சுற்றிக்கொண்டே இருந்தமையாலும் அவருடைய வள்ளல் தன்மை அவருக்கே தீமையாக முடிந்தது. அவருக்கு ஊரில் வேண்டாதவர்களே கிடையாது. ஒருசில நண்பர்கள், வீட்டில் உள்ள பொருள்களைக் கடத்திச்செல்ல அவருக்குத் துணையாகவும் இருந்தார்கள். அவர்களுள் யார் யார் எவ்வெவ்வாறு உதவினார்கள் என்பது தெரியாது. என் தந்தையார் இந்த நிலையில் இருக்கத் தாயாரோ தன் ஒரே மகன்’ வாழவேண்டும் என்ற காரணத்தாலே பாட்டனார் சொத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று கருத முயன்று, அதனால் கணவனொடு மாறுபட்டுக்கூட நிற்பார் கள். இவர்கள் இவ்வாறு இருப்பதைக் கண்ட என் பெரிய தாயாரும் பெரிய தந்தையாரும் இவர்களோடு ஒரே குடும்ப மாக இருந்தால் என் தந்தையால் அவர்கள் உடைமைகளும்