பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 333 பட்டம் பெற்றவர். பல நாட்களாக அங்கேயே பணியாற்றி, சொந்தமாக வீடும்கட்டிக்கொண்டு சிறக்க வாழ்கின்றனர். முறையாக அவருக்குத்தான் இந்தத் தலைமைப் பதவி தந்திருக்க வேண்டும். எனவே நான் சென்றதில் அவருக்கு மனக் கசப்புத்தான். சில சமயங்கள் பல நடவாத நிகழ்ச்சி களைச் சொல்லி என்னைப் பயமுறுத்துவார் என்றாலும் பழகப்பழக எனக்கு உற்றவராகி என்வழி ஏவல்கேட்டுச் செயலாற்றி வந்தார். உடன் மாணிக்கம் அவர்களும் பணியாற்றினார். அத்துடன் அரசர் கல்லூரியிலும் அவர் பணி இருந்தது. என் மாணவரல்லாததாலும் அவர் இருவருக்கும் சிலவற்றில் வேறுபாடு இருந்தமையாலும் என்னை முற்றும் கவனித்து வந்தார்; வேண்டிய உதவிகளைச் செய்வார். நானும் அடிக்கடி இருவர் வீடுகளுக்கும் சென்று அவர்தம் குடும்பங்களுள் ஒருவனாகப் பழகினேன். இவர்களை அன்றி இரு நகரங்களிலும்-ஐதராபாத், செக்கந்திராபாத்மூன்று கல்லூரிகளில் தமிழ் இருந்தது. என் மாணவர்கள், முருகன், சீனிவாசன் என்பவர்களும் மேரிகொர்னீலியஸ் என்ற பெண்மகளும் ஆசிரியர்களாக இருந்தார்கள். மேரி கொர்னிலியஸ் பின் சென்னை செல்லம்மாள் கல்லூரியில் ஆசிரியர் பணி ஏற்று அண்மையில் ஒய்வு பெற்றுள்ளனர். அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றியபோதிலும் பல்கலைக்கழகத்திற்குக் கட்டுப்பட்டே செயலாற்றினார்கள். எனவே அனைவரையும் அடிக்கடி அழைத்து-பருவத்துக் கொருமுறை பாடங்கள் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் கலந்து பேசி மகிழ்வது வழக்கம். அதுவரை இந்த வழக்கம் அங்கே இல்லையாதலால், அனைவரும் இதை மகிழ்வொடு ஏற்று, கலந்துரையாடிக் களிப்பெய்தினர். சிலசமயம், ஒருசில பாடங்களை முதுகலை வகுப்பிற்கு அவர்களுள் ஒருவரை எடுக்கச் சொல்லுவதுண்டு. நானும் அவர்கள் கல்லூரி களுக்குச் சென்று அங்கே தமிழ் பயிலும் மாணவர்களுடன்